7 Oct 2012

சூரியனின் வாழ்க்கைச் சுழற்சி

                   விண்மீன்களும் வாழ்க்கைச் சுழற்சிக்கு உட்பட்டவையே. உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையைச் சார்ந்த சூரியன் தோராயமாக 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் ஹைட்ரஜன் மூலக்கூறு மேகங்களின் மோதலால் பால் வழியில் தோன்றியது. தோராயமாக வட்டவடிவில் இருக்கும் சூரியனின் கோளப் பாதை பால் வழி விண்மீன் மண்டல மையத்திலிருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் அப்பால் அமைந்துள்ளது.

                              சூரிய உருவாக்கத்தைக் கணிக்க இரு வகையான கணக்கீடுகள் பயன் படுத்தப்படுகின்றன. முதல் முறையில் சூரியனின் பரிணாம வளர்ச்சியில் தற்போதய நிலை, கணிப்பொறி உருவகப்படுத்துதல் முறையில் கணிக்கப்படுகிறது. இம்முறையில் சூரியனின் நிறை, வெப்ப ஆற்றல், ஒளியின் மூலம் அறியப்படுகின்ற தனிமங்களின் அளவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இம்முறை மூலம் சூரியனின் வயது 4.57 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது . மற்றொரு முறையான கதிரியக்க அளவியல் முறையில் சூரிய மண்டலத்தின் மிகமுந்தைய துகள்களை ஆய்வதன் மூலம் சூரியனின் வயதை கண்டறிவது. இம்முறையில் சூரியனின் வயது 4.567 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது .

                  ஆயிரக்கணக்கான விண்மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியை ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் சூரியன் தனது நடுவயதை அடைந்து விட்டதைக் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் அணுக்கரு புணர்வு விளைவினால் ஈலியம் அணுக்களாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் சுமார் 4 மில்லியன் டன் எரிபொருள் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இவ்வாற்றலையே நாம் சூரிய ஒளியாகவும், வெப்பமாகவும் பெறுகிறோம். சூரியத் தோற்றத்தில் இருந்து சுமார் 100 பூமியின் எடையுள்ள பொருள் ஆற்றலாக இதுவரை மாற்றப்பட்டுள்ளது.

                             அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. இந்நிகழ்வை மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்று கூறலாம்.

                      சூரியனின் நிறை மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) ஏற்படப் போதுமானது அன்று. எனவே 5 பில்லியன் வருடங்களுக்கு பின், சூரியன் ஒரு சிவப்புப் பெருங்கோளாக (red giant) மாறும். அதன் வெளி அடுக்குகள் விரிவடைந்து உள்பகுதியில் உள்ள ஹைரஜன் எரிபொருள் அணுக்கரு புணர்வு விளைவுக்கு உட்பட்டு ஈலியமாக மாறும். வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100 மில்லியன் கெல்வின் என்ற நிலையில் ஈலியம் புணர்வு விளைவு ஆரம்பிக்கப்படும். இவ்விளைவின் விளைவுப் பொருள் கார்பன் ஆகும். .

சூரியனின் வாழ்க்கை சுழற்சி
 
                        இந்நிலையில் பூமியின் உள்ளமை ஐயத்துக்குரியது. ஏனெனில், சிவப்புப் பெருங்கோளாக சூரியன் மாற்றம் பெறும்போது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் பூமியின் சுற்றுவட்ட பாதையை முழுவதுமாக சூரியனுக்குள் இழுத்து விடும். ஆனால் சூரியனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி சூரியன் பூமியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.  சில இயற்பியல் விதிமுறைகளின் படி பூமி சூரியனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் பூமியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்று பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சூரியனின் வெப்பம் 10% அதிகமாகிறது. 

                      சிவப்புப் பெருங்கோள் நிலையினைத் தொடர்ந்து சூரியனின் வெளி அடுக்குகள் வீசி எறியப்படும். அவை கோள வான்புகையுருவை (planetary nebula) உருவாக்க கூடும். மீதம் இருக்கும் கோள் மெதுவாகக் குளிர்ந்து குள்ள வெள்ளைக் கோளாக (white dwarf) மாறும். இதே விண்மீன் பரிமாணமே சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறையுள்ள விண்மீன்களிடம் காணப்படுகின்றது. 

2 Oct 2012

பால் வீதியில் கதிரவனின் அமைவிடம்


பால் வீதியின் வடிவம் - சுருள் வடிவம் கொண்ட பால் வீதியில் பல வளைவுகள் அமைந்துள்ளன. அவற்றுள் ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. மஞ்சள் நிற புள்ளி சூரியனை குறிக்கிறது.
              நமது விண்மீன் மண்டலமான பால்வீதியின் உள் வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. சூரியன் அமைந்துள்ள இடத்தில் இருந்து விண்மீன் மண்டல மையம் சுமார் 24 ,800 ஒளியாண்டுகள் இருக்கலாம் எனறு கணிக்கப்படுகிறது. நமது சூரியன் அமைந்துள்ள ஓரியன் வளைவுக்கும், அருகில் உள்ள பெர்சியஸ் வளைவுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6 ,500 ஒளியாண்டுகள் ஆகும்.
சூரிய உச்சி (solar apex) என்ற பதம் சூரியன் பால் வழியில் பயணிக்கும் திசையை கூற பயன்படுத்தப் படுகிறது. தற்பொழுது சூரியன் வேகா விண்மீனை நோக்கி பயணம் செய்கிறது. வேகா விண்மீன் ஹெர்குலஸ் விண்மீன் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கதிரவனின் கோளொழுக்கு நீள்வட்ட பாதையில் அமைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

                    சூரிய மண்டலம் ஒருமுறை விண்மீன் மண்டலத்தை (பால் வீதி) சுற்றி வரச் சுமார் 225–250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது 

               இதன் மூலம், சூரியன் தன் தோற்றத்தில் இருந்து தோராயமாக 20–25 தடவைகள் விண்மீன் மண்டலத்தை சுற்றி வந்துள்ளது என்பதை அறியலாம். மற்றொரு வகையில் கூறினால் மனித தோற்றத்தில் இருந்து இன்று வரை தனது பாதையில் சுமார் 1/1250 பங்கு தூரத்தை கடந்துள்ளது. விண்மீன் மண்டல மையத்தில் இருந்து நோக்கினால் சூரியனின் கோளோழுக்க வேகம் தோராயமாக 251 km/s  . இந்த வேகத்தில் 1400 வருடங்களில் சூரிய மண்டலம் பயணித்த தூரம் 1 ஒளியாண்டு ஆகும்.

1 Oct 2012

புவியின் மீது ஞாயிற்றின் ஆற்றல்


                     சூரிய ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். சூரிய மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் சூரிய ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். சூரிய மாறிலி, சூரியனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட் / சதுர மீட்டர் ஆகும். சூரிய ஒளி பூமி மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன் வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. குறைவான அளவிலான வெப்பமே தரையை வந்தடைகிறது. ஒளிச்சேர்க்கை யின் போது தாவரங்கள் சூரிய ஒளி ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றுகின்றன. சூரிய மின்கலனில், சூரிய ஒளியாற்றல்/ வெப்பம் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலும் சூரிய ஒளியில் இருந்து மறைமுகமாக, (மக்கிய தாவரங்களில்) இருந்து கிடைக்கும் ஆற்றலே. சூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்கள் நுண்நுயிர் கொல்லியாகும். மேலும் இக்கதிர்கள் மாந்தர்களிடம் வேனிற் கட்டி போன்ற கொடிய விளைவுகளையும், மற்றும் உயிர்ச்சத்து D (விட்டமின் D) உற்பத்தி ஆகிய நன்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. . புறஊதா கதிர்கள் பூமியை சூழ்ந்துள்ள ஓசோன் படலம் மூலம் மட்டுப் படுத்தப் படுகிறது. இக்கதிர்களே மனிதரின் வேறுபட்ட தோல் நிறத்துக்கும் காரணமாக அறியப்படுகிறது.

25 Sept 2012

வகைப்பாடு(சூரியன்)

           சூரியன் விண்மீன் வகைப்பாட்டில் G2V வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது. G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5 ,500 °C ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறத்தினைக் கொண்டிருப்பதாகத் திரு.சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு விளக்குகிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. சூரியன் பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் சூரியனை செம்மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ காட்டுகிறது 

           G2V என்ற குறியிட்டில் V என்ற எழுத்து மற்ற பல விண்மீன்களை போன்று சூரியனும் தனது ஆற்றலை அணுக்கரு புணர்தல் பெறுவதை குறிக்கிறது. சூரியனில் ஹைட்ரஜன் கருவும் ஹீலியம் கருவும் சேர்வதால் ஆற்றல் உருவாகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் சுமார் 100 மில்லியன் G2 வகை விண்மீன்கள் உள்ளன. அவற்றில் சூரியனும் ஒன்று. சூரியன் பால் வழியில்(நமது விண்மீன் மண்டலம்) உள்ள பல சிவப்பு குறுமீன்களை விட 85% வெளிச்சமானது. சூரியன் தோராயமாக 24 ,000 to 26 ,000 ஒளியாண்டுகள் அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை 225–250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் கோளொழுக்க வேகம் ( orbital speed ) சுமார் 251 கிமீ/வினாடி . இந்த அளவீடுகள் இப்போதைய அறிவின்படி, நவின கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது. இவை வருங்காலத்தில் மாற வாய்ப்புள்ளது. மேலும் சூரியன் சுற்றி வரும் நமது விண்மீன் மண்டலமும் அண்ட மையத்தை கொண்டு வினாடிக்கு 550 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவது வியப்பூட்டும் தகவலாகும்.

Moon transit of sun large.ogg
நிலவு கதிரவனைக் கடப்பதை சூரிய ஆராய்ச்சிக் கலமான STEREO B பதிந்துள்ள குறும்படம்
 
 
 
                 சூரியன் விண்மீன் வகைபாட்டில் G2V வகையை சார்ந்ததாகக் குறிக்கப்படுகிறது. மேலும், விண்மீன்கள் அவற்றில் உள்ள உலோகங்களால் வகை செய்யப்படுகின்றன.
  1. உலோகச்செறிவு மிக்க விண்மீன்கள் (population i )
  2. உலோகச்செறிவு இல்லா விண்மீன்கள் (population ii )
  3. உலோகமில்லா விண்மீன்கள் (population iii )
                   இவற்றுள் சூரியன் முதல் வகையான உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையை சார்ந்தது. சூரியன் உருவாக்க சூரியனுக்கு அருகில் உள்ள மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் (supernova) அதிர்ச்சி அலைகளே காரணமாய் இருக்கக் கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய விளைவுகள் வேதியல் தனிமங்கள் மிகுந்த சூரியன் போன்ற விண்மீன்களை எளிதாக உருவாக்க காரணம் காரணம் ஆகும்.

22 Sept 2012

ஞாயிறு அல்லது சூரியன்

ஞாயிறு (விண்மீன்)

ஞாயிறு
சோகோ(SOHO) விலிருந்து ஞாயிற்றின் படிமம்
பெரிய படிமம்
அவதானிப்புத் தரவுகள்
பூமியிலிருந்து
தொலைவு (சராசரி)
1.496×1011 மீ
காணொளி
வெளிச்சம் (V)
-26.8m
வெளிச்சத்
தனிமுதல் அளவு
4.8m
இயற்பியல் பண்புகள்
விட்டம் 1,392,000 கிமீ
சார்பு விட்டம்(dS/dE) 109
மேற்பரப்பளவு 6.09 × 1012 கிமீ2
கன அளவு 1.41 × 1027 மீ3
நிறை 1.9891 × 1030 கிகி
பூமி ஒப்புத் திணிவு 332 946
அடர்த்தி 1411 கிகி மீ−3
பூமி ஒப்பு அடர்த்தி 0.26
நீர் சார்பான அடர்த்தி 1.409
மேற்பரப்பு ஈர்ப்பு 274 மீ நொடி−2
பூமி சார்மேற்பரப்பு ஈர்ப்பு 27.94 கிராம்
மேற்பரப்பு
வெப்பநிலை
5778 K
சூழ்புலத்தின்
வெப்பநிலை
5 × 106 K
ஒளிர்வு (LS) 3.827 × 1026 J s−1
சுற்றுப்பாதைசார் இயல்புகள்
சுழற்சிக்காலம்  
மையக் கோட்டில்: 27நா 6ம 36நி
At 30° latitude: 28d 4h 48m
At 60° latitude: 30d 19h 12m
At 75° latitude: 31d 19h 12m
கலக்டிக் மையம் பற்றிச்
சுற்றும் காலம்
2.2 × 108 ஆண்டுகள்
ஒளிக்கோள உட்கூறுcomposition
ஐதரசன் 73.46 %
ஈலியம் 24.85 %
ஆக்சிசன் 0.77 %
கரிமம் 0.29 %
இரும்பு 0.16 %
நியோன் 0.12 %
நைதரசன் 0.09 %
சிலிக்கன் 0.07 %
மக்னீசியம் 0.05 %
கந்தகம் 0.04 %

              ஞாயிறு அல்லது சூரியன் (Sun) மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, ஞாயிற்று மண்டலத்தின் மையத்தில் உள்ள, ஞாயிற்று மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன. ஞாயிற்றின் எடை மட்டுமே பரிதி மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது . பரிதிக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு தோராயமாக 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். இத்தொலைவை ஒளி சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரம் பரிதி ஆற்றலேயாகும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களில் சேகரிக்கப்படும் பரிதி ஆற்றல், பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும். மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் பரிதியைச் சார்ந்தே உள்ளன.

           பரிதி காந்த ஆற்றல் மிகுந்த விண்மீன் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரிதிக் காந்தப்புலம் ஒவ்வெரு வருடமும் தன்னிலையில் சிறு மாற்றம் அடைவதுடன், பதினொரு வருடங்களுக்கு ஒருமுறை நேர்மாறாகிறது. பரிதிக் காந்தப்புலம், பரிதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விளைவுகளை கதிரவனுயிர்ப்பு (solar activity ) என்று குறிப்பிடுவர். உதாரணமாக சூரியமரு (sunspot) , சூரிய எரிமலை (solar flare ), சூரிய சூறாவளி (solar winds) ஆகியவை சூரிய காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் ஆகும். சூரிய மண்டல உருவாக்கத்தில் சூரியனில் நடைபெறும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் பெரும் பங்காற்றி உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் மூலம் புவியின் அயன மண்டலம் வடிவத்தில் மாற்றம் அடைகிறது.

            கதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஈலியம் (சுமார் 24% நிறை , 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன் , கந்தகம் , மக்னீசியம் , கரிமம், நியான் , கல்சியம் , குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

21 Sept 2012

பாதம்

               புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை.ஒவ்வொரு விண்மீனும் நான்கு பாதங்கள் கொண்டவை. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனக் குறிப்பிடப் படுகின்றன.ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள் (நிமிடவளைவுகள்). இதன் மூலம் இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்) 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இதிலிருந்து இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் (ஓரைகள்) ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை அடக்கியுள்ளது.

அட்டவணை

                                         கீழேயுள்ள அட்டவணை நட்சத்திரங்களையும், பாதங்களையும், அவற்றோடொத்த இராசிகளையும் சூரியன் அந்த இராசிகளில் உள்ள மாதங்களையும் காட்டுகின்றது.
நட்சத்திரம் பாதம் இராசி இராசிக்கான தமிழ் மாதம்
1. அச்சுவினி முதலாம் பாதம் மேடம் சித்திரை
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
2. பரணி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
3. கார்த்திகை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம் இடபம் வைகாசி
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
4. ரோகிணி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
5. மிருகசீரிடம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் மிதுனம் ஆனி
நான்காம் பாதம்
6. திருவாதிரை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
7. புனர்பூசம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம் கர்க்கடகம் ஆடி
8. பூசம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
9. ஆயிலியம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
10. மகம் முதலாம் பாதம் சிங்கம் ஆவணி
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
11. பூரம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
12. உத்தரம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம் கன்னி புரட்டாசி
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
13. அத்தம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
14. சித்திரை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் துலாம் ஐப்பசி
நான்காம் பாதம்
15. சுவாதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
16. விசாகம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம் விருச்சிகம் கார்த்திகை
17. அனுஷம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
18. கேட்டை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
19. மூலம் முதலாம் பாதம் தனு மார்கழி
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
20. பூராடம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
21. உத்திராடம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம் மகரம் தை
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
22. திருவோணம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
23. அவிட்டம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் கும்பம் மாசி
நான்காம் பாதம்
24. சதயம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
25. பூரட்டாதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம் மீனம் பங்குனி
26. உத்திரட்டாதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
27. ரேவதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்

16 Sept 2012

இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

                      குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஓர் நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.

                முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 பாகை அளவுள்ளது.13.33 பாகை என்பது 13o, 20 பாகைத்துளி (நிமிடவளைவுகள்). (1 பாகை= 60 பாகைத்துளி (நிமிடவளைவுகள்)).

15 Sept 2012

விண்மீன்

தனு நட்சத்திர மேகம் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட, பால்வெளி கலக்சியிலுள்ள, தனு நட்சத்திர மேகத்தின் இப் படத்தில் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் தெரிகின்றன.
 
 
                 விண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம்) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினாலாகும். சூரியன் இதற்கு விதிவிலக்கு. ஏனெனில், வட்டமான தட்டுப்போல் தெரிவதற்கும், பகலில் வெளிச்சம் தருவதற்கும் ஏற்றவகையில் பூமிக்குப் போதிய அளவு அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் மட்டுமே.
              விண்ணில் தெரியும் விண்மீன்களில் கணக்கற்றவை; அளவில் கதிரவனைப் போன்று பன்மடங்கு பெரியனவாய் உள்ள விண்மீன்களும் உள. விண்மீன்களில் உள்ள அணுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வேறு பொருள்களாய்த் திரிந்த வண்ணமாய் உள்ளன. இவ்வாறு அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது எராளமான ஆற்றல் வெளிவிடுகின்றது. வெளிவிடும் ஆற்றலின் ஒரு முகம்தான் கண்ணுக்குப் புலப்படும் ஒளி.

               சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புராக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் செல்லும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
        பெரும்பாலான விண்மீகள் 100 கோடிக்கும், 1000 கோடிக்குமிடைப்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. சில அண்டத்தின் மதிப்பிடப்பட்ட வயதான 1370 கோடி ஆண்டுகளளவு தொன்மையானவை. மிகச் சிறிய நட்சத்திரங்களிலிருந்து நமது சூரியனிலும் ஆயிரம் மடங்குகள் பெரிதான, அதாவது 160 கோடி கிலோமீற்றர் விட்டமுள்ள விண்மீன்கள் வரை, அண்டவெளியில் உள்ளன. தங்கள் ஆற்றல் மூலங்களை முற்றாக இழந்தபின், சொந்த ஈர்ப்பு விசையின் கீழ் ஒடுங்கி மிகச்சிறிய அளவினதாக மாறிவிடுகின்ற விண்மீன்கள் , வெண் குறுமீன்கள் (White Dwarf), நியூத்திரன் விண்மீன்கள், கருந்துளைகள் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன.

13 Sept 2012

சூரியக் குடும்பம்

சூரியக் குடும்பத்திலுள்ள கோள்கள்

  • புதன்
  • வெள்ளி
  • பூமி
  • செவ்வாய்
  • வியாழன்
  • சனி
  • யுரேனஸ்
  • நெப்டியூன்

குறுங்கோள்கள்

  • செரசு
  • புளூட்டோ
  • ஏரிஸ்
  • ஹௌமியா
  • மேக்மேக்
  • ஸெட்னா

துணைக் கோள்கள்

  • நிலா

12 Sept 2012

கோள்

             கோள் என்பது ஒரு விண்மீனின் ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் விண்மீனைச் சுற்றி வரும் ஒரு பெரிய பருப்பொருள். விண்மீன்களைப் போல கோள்கள் தன்னுள்ளே வெப்ப அணுப்புணர்ச்சிகள் ஏதும் நிகழ்ந்து கடுவெப்பம், பேரொளி, பேராற்றல் கதிர்கள் வீசுபவை அல்ல.


 
            பெரும்பாலும் வளிமத்தால் ஆன நான்கு மிகப்பெரிய வளிமப்பேருண்டைக் கோள்கள்: வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ். மஞ்சள் நிறத்தில் காட்டியுள்ள கதிரவனும் இந்த நான்கு கோள்களும் முறையான ஒப்பீட்டு அளவுகளுடன் காட்டியுள்ளன
 

11 Sept 2012

நாடி சோதிடம் - உயர்வுகள்

                       நாடி சோதிடம் பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களாக இவ்வுலக ஆன்மாக்களுக்கு உபதேசிக்கப்பட்டு வருகின்றது. அண்டசராசரங்களுக்கும் ஆதிகுருவாக விளங்கக்கூடிய அருள்குரு ஸ்ரீ காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய அருள்குரு ஸ்ரீ கோரக்கருக்கு உபதேசம் செய்த நாடிநூல் உலகப்பிரசித்தி பெற்றதாகும். தேவேந்திரனால் நடத்தப்படும் தேவசபையை காகபுஜண்டர் நாடி சோதிடம் நிர்ணயம் செய்கிறது. நாடி சோதிடம் மூலம் இவ்வுலத்தில் உள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களின் பலன் களையும் தெரிந்து கொள்ளலாம். உலத்தில் ஒரு மனிதனை சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வழிகாட்டும் குருநூல் நாடி சோதிடம் ஆகும். மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளை உரைக்கும் நாடிநூல் அந்த தனிப்பட்ட மனிதனின் உயிர் ரேகைகளான நவரேகைகளிலொன்றை மையமாகக் கொண்டு சுழிமுனை நாடியை மையமாகக் கொண்ட நவநாடிகளில் ஒரு நாடியால் நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகத்தைப் பற்றிய பிற சூட்சும ரகசியங்கள் சுழிமுனை நாடியை மையமாகக் கொண்ட நவ நாடிகளில் ஒரு நாடியாலும் கால நிலையை மையமாகக் கொண்டும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
                     வேத சோதிடமானது ஒரு தனிப்பட்ட மனிதனின் (சோதிடரின்) சோதிடக் கல்வி, யுக்தி மற்றும் ஞானத்தால் நிர்ணயம் செய்யப்படுவதால் பலன்களின் நடைமுறைகளில் பிறழ்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாலும்; வேத சோதிடர் பலன்களை நிர்ணயிக்கும் பொழுது அவரின் ஊழ்வினை அவரை கட்டுப்படுத்துவதாலும் வேத சோதிடப் பலன்கள் முழுமையான பலன்களை இவ்வுலகிற்கு அளிப்பது மிகக்கடினமான ஒன்றாக இருப்பதால் ஊழ்வினைக்குட்படாத முனிவர்களால் நிர்ணயிக்கப்படும் நாடி சோதிடப்பலன்கள் உயிருள்ள பலன்களாகும். வேத சோதிடப்பலன்களின் மூலநூல் உரைநடை வழியைக் கொண்டுள்ளதால் பலன்களின் உயிர் தன்மை முழுமைபடுத்துவதில் சிரமங்கள் இருக்கின்றது. உயர்வான ஊழ்வினைகளை சுமக்கும் தர்ம சிந்தனைக் கொண்ட வேத சோதிடரால் மட்டுமே உயிருள்ள சோதிடப் பலன்களை இவ்வுலகிற்கு கொடுக்க முடியுமென்பதால் இத்தகைய நிலை கொண்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே. இப்புவியில் வாழ்வதால் வேத சோதிடத்தின் பலன்கள் முழுமை பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன.
                         நாடி சோதிடத்தின் மூலநூல் செய்யுள் வடிவத்தைக் கொண்டதாகும், "தமிழ்" ஓர் உயிருள்ள மொழியாகும். எனவே, தமிழில் உயிர் எழுத்துக்கள் என்றும்; உடல் (மெய்) எழுத்துக்கள் என்றும்; உயிருடல் எழுத்துக்கள் (உயிர்மெய் எழுத்துக்கள்) என்றும்; மேற்கண்ட அனைத்தையும் இயக்கும் ஆயுத எழுத்து ஒன்றுமாக தமிழ்மொழி வடிவமைக்கப்பட்டுள்ளதாலும்; மேற்கண்ட நான்கு பிரிவுகள் மட்டுமல்லாமல் தேவரகசியமாக ஐந்தாவது பிரிவான ஆண் எழுத்துக்கள் மற்றும் பெண் எழுத்துக்கள் என்னும் சூட்சுமப் பிரிவு தமிழ்மொழியில் உள்ளதால் ஆண் எழுத்துக்களையும் பெண் எழுத்துக்களையும் சமமான ஆற்றலோடு பாடல் வகையில் பிணைத்து பலன்களை முறைப்படுத்தி பாடல் வடிவில் பலன்களை இவ்வுலகத்திற்கு சொல்கின்றபடியினால் எவ்வாறு ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சமமாக முழுமையாக புணர்ச்சி செய்தால் அதன் விளைவாக ஒரு முழுமையான உயிர்ப்பொருள் இவ்வுலகத்தில் படைக்கப்படுமோ அவ்வாறே நிலையுடன் நாடி சோதிடப்பலன் கள் "அறம்பாடல்" என்னும் சூட்சுமக்கயிற்றால் பிணைக்கப்பட்டு வெளியிடப்படுவதால் உலகத்தில் வாழும் அனைத்து சோதிட சாஸ்திரத்தினும் உயர்வுள்ளதாய் "தாய்" சாஸ்திரமாக நாடி சோதிட சாஸ்திரம் விளங்குகிறது.
                  பல ஆண்டுகளுக்கு முன் அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய அருள்குரு கோரக்கருக்கு உலகத்தின் பல்வேறு ரகசியங்களைப் பற்றி போதித்து வருகையில் அருள்குரு கோரக்கர் தன்னுடைய குருவாகிய காகபுஜண்டரிடத்திலே இவ்வுலக மானிடர்களின் வாழ்க்கை நிலைகளைப் பற்றிய சூட்சுமங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டபடியினால் அருள்குரு காகபுஜண்டரும் அதற்கு இணங்கி இந்திந்த காலத்தில் இன்னவயது கொண்ட இன்ன பிறப்பு விவரங்களைக் கொண்ட இந்த மானிடர் நாடிநூல் சுருதியை வேண்டிக் கேட்பார், அப்போது அந்த மானிடருக்கு இன்னன்ன பலன்கள் நடக்கும் எனப் பாடல் வடிவில் தன் சீடரிடத்திலே திருவாய் மலர்ந்தருளினார். அருள்குரு காகபுஜண்டரால் திருவாய் மலர்ந்தருளப் பெற்ற தேவரகசியங்களை ஓலைச்சுவடியில் எழுதி அருள்குரு கோரக்கர் தன்னுடைய ரகசியப் பேழையில் வைத்து அவரின் ரகசிய இடமாகிய கொல்லிமலை கோரக்கர் குண்டத்தில் வைத்து பாதுகாத்து வைத்தார். அருள்குரு காகபுஜண்டர் மற்றும் அருள்குரு கோரக்கரின் குருவருளால் மேற்படி குருமார்களின் கலியுக வாரிசான பாஸ்கரமகரிஷி அவர்களுக்கு புதையலாக கோரக்கரால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் கிடைக்கப் பெற்று இவ்வுலகோருக்கு குருவருள் ஆணைப்படி விரித்துரைக்கப்படுகின்றது. எனவே, முனிவர்களால் நேரடியாக வழங்கப்படுகின்ற நாடி சோதிட சாஸ்த்திரம் பிற சாஸ்திரத்தினும் தலையானதாகும்.

10 Sept 2012

நாடி சோதிடம்

                        நாடி வரும் ஆன்மாவிற்கு உபதேசிக்கப்படும் வாழ்க்கைப் பலன்கள் நாடி சோதிடம் எனப்படும். ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பிரதான சுவாச நிலைகல் இருவகைகளாகப் பிர்க்கப்பட்டுள்ளது. அவைகள் இடகலை (சூரிய கலை) மற்றும் பிங்கலை (சந்திர கலை) எனப்படும். இடகலை என்பது வலது நாசியின் வழியாக செல்லும் சுவாசத்தைக் குறிப்பதாகும். பிங்கலை என்பது இடது நாசியின் வழியாக செல்லும் சுவாசத்தைக் குறிப்பதாகும். மேற்கண்ட இரண்டு சுவாசக்கலைகளோடு மூன்றாவதாக ஒரே நேரத்தில் வலது மற்றும் இடது நாசிகளின் வழியாக சுவாசக்கலை நடத்துதல் சுழிமுனை எனப்படும். முனிவர்கள், சித்தர்கள், ஞானிகள் மற்றும் யோகிகள் மூன்றாம் கலையான சுழிமுனைக்கலையை நடத்தி உயிர் வாழ்பவர்களாவார்கள்.

                            சுழிமுனைக்கலையை நடத்துபவர்களுக்கு முக்கால ஞானத்தைப் பெறும் சித்தி ஏற்படும். சுழிமுனை நாடியை அடிப்படையாகக் கொண்டு அதன் உட்பிரிவுகளாகிய ஏழு சுவாசக்கலைகளையும் வெவ்வேறு சதவீத நிலைகளில் நடத்தலாம். சப்த நாடிகலைகளாவது அத்தி, அலம்புடை, காந்தாரி, சங்கினி, சிங்குவை, புருடன் மற்றும் குரு ஆகிய உட்பிரிவுக் கலைகளாகும். முனிவர்கள் தாங்கள் சுவாசிக்கும் பிரதான மற்றும் உட்பிரிவு நாடிகலைகளின் வழியாக அவர்களிடம் நாடி வரும் ஆன்மாக்களின் நல்வினை மற்றும் தீவினைப் பலன்களை ஞானத்தில் உணர்ந்து உலகத்திற்கு உணர்த்துவார்கள். எனவே, சப்த நாடிகளின் ரகசிய பிம்பங்களை ஆதாரமாகக் கொண்டு நவகிரகங்களின் சூட்சும ரகசியங்களோடு ஒப்பிட்டு உலகிற்கு அளிக்கும் சோதிட உபதேசம் நாடி சோதிடமாகும்.

9 Sept 2012

இந்து சோதிடம் (எ) இந்திய சோதிடம்


                  இந்து என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரன் என்றால் தாய் என்று பொருள். எனவே, இந்து மதம் உலகத்தின் தாய் மதமாகும். எனவே, இந்து சோதிட சாஸ்திரமானது இவ்வுலகில் வாழும் பிற சோதிட சாஸ்திரங்களுக்கெல்லாம் தாய் சோதிட சாஸ்திரமாகும். ஒரு தாயானவள் தன் குழந்தைக்கு எப்படி கபடமில்லாமல் உலக ரகசியங்களை தன் குழந்தைக்கு அன்போடு உபதேசிப்பாளோ அவ்வாறு முழுமையாக உபதேசிக்கும் சோதிடம் எனப்படும். வேத சோதிடம் இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டதால் இதற்கு இந்து சோதிடம் என்று மற்றொரு பெயரும் வழங்கலாயிற்று. ஊழ் வினையின் பயனாக விளையும் வாழ்க்கைப்பயிரில் ஏற்படும் களைகளைக் களைந்து வாழ்க்கைப் பயிர் செம்மையாக வளர்ந்து ஓங்க வழிகாட்டும் குரு உபதேசம் இந்து சோதிடம் ஆகும்.
           இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரன் ஆகிய முமூர்த்திகளை அடிப்படையாகக் கொண்ட தேவ குடும்பத்தினர்களின் அருளால் இவ்வுலக உயிர்களின் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகள் மற்றும் தீமைகளைக்களையும் பரிகார மார்கங்களாகிய தேவதாபிரதிட்டைகள் மற்றும் தேவதா வழிபாடு போன்ற தெய்வீக முறைகளை முழுமையாக விளக்கும் வேத சோதிடமே இந்து சோதிடம் எனப்படும். இந்து சோதிடமானது இந்தியாவில் பிறந்த சோதிட சாஸ்திரமாகையால் இதற்கு இந்திய சோதிடம் என்றொரு பெயரும் வழங்கலாயிற்று.

8 Sept 2012

வேத சோதிடம் - அறிமுகம்

                      உலகில் வாழும் உயிர்களுக்கு வழிகாட்டும் தேவரகசியங்கள் அடங்கிய குருநூல் வேதம் எனப்படும். உலகத்தின் முழு முதற்கடவுளான பரம்பொருளை அடிப்படையாகக் கொண்டு, பரம் பொருளால் இவ்வுலகை ஆள்வதற்காக நியமிக்கப்பட்ட நவகிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய பிரதான கிரகங்கள் மற்றும் அதன் பண்புகள்; நவகிரகங்களின் உள்ளாதிக்கத்திற்குட்பட்ட இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் மற்றும் ராசி மண்டலத்தின் பன்னிரண்டு ராசிகள் மற்றும் அவைகளின் பண்புகள், காலக் கணக்கீடுகளை நிர்ணயம் செய்யும் ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள், திதிகள் மற்றும் கரணங்கள் மற்றும் அவைகளின் பண்புகள் வரையிலான ஆதிக்கஸ் சக்திகளால் இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் முக்கால நிகழ்வுகளை நூல் வழியிலும், யுக்தியின் வழியிலும், ஞானத்தின் வழியிலும் உணர்ந்து உலகிற்கு பலன்களைக் உணர்த்தி வழிகாட்டும் குரு உபதேசம் "வேத சோதிடம்" எனப்படும்.

6 Sept 2012

சோதிடம் அறிமுகம்


         அண்டவெளியில் சுழன்று கொண்டிருக்கும் நவகிரகங்களின் ஒளிச்சிதறல்களின் தாக்கத்தால் பூவுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை வெளிச்சம் காட்டி உலகத்தோருக்கு வழிகாட்டும் தெய்வீக சாத்திரம் "சோதிடம்" எனப்படும்.

    சோதி+இடம் = சோதிடம். இருள் சூழ்ந்துள்ள ஓர் அறையில் சோதியமயமான ஒரு விளக்கை ஏற்றினால், அந்த அறையின் முழு ரகசியங்களும் எப்படி தெள்ளத் தெளிவாகக் காட்சி கொடுக்கின்றதோ அவ்வாறாகவே வாழ்க்கை என்னும் அறையில் சோதிமயமான ஞானவிளக்கை ஏற்றிப்பார்த்தால் வாழ்க்கையின் முழு ரகசியங்களும் மிகத் தெளிவாக காட்சி கொடுக்கும். ஊழ்வினையை அடிப்படையாகக் கொண்டு உலக உயிர்கள் அடையக் கூடிய வாழ்க்கையின் முக்கால ரகசியங்களை விளக்கி வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருநூல் சோதிடம் எனப்படும்.

4 Sept 2012

சோதிடத்தில் விண்மீன் குழுக்கள்

ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 1313 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூர் செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூராகும், 'ரேவதி' கடைக்கூராகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 313 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூராகும், 'மீனம்' கடைக்கூராகும்.
இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்:
விண்மீன் குழு இராசி பாகை
அசுவினி மேடம் 13°20'
பரணி மேடம் 26°40'
கிருத்திகை பாதம் 1 மேடம் 30°
கிருத்திகை பாதம் 2,3,4
ரோகிணி பாதம் 1
இடபம் 43°20'
ரோகிணி பாதம் 2,3,4
மிருகசீரிடம் பாதம் 1
இடபம் 56°40'
மிருகசீரிடம் பாதம் 2 இடபம் 60°
மிருகசீரிடம் பாதம் 3,4
திருவாதிரை பாதம் 1,2
மிதுனம் 73°20'
திருவாதிரை பாதம் 3,4
புனர்பூசம் 1,2
மிதுனம் 86°40'
புனர்பூசம் பாதம் 3 மிதுனம் 90°
புனர்பூசம் பாதம் 4
பூசம் பாதம் 1,2,3
கடகம் 103°20'
பூசம் பாதம் 4
ஆயில்யம் பாதம் 1,2,3
கடகம் 116°40'
ஆயில்யம் பாதம் 4 கடகம் 120°
மகம் சிங்கம் 133°20'
பூரம் சிங்கம் 146°40'
உத்திரம் பாதம் 1 சிங்கம் 150°
உத்திரம் பாதம் 2,3,4
அட்டம் பாதம் 1
கன்னி 163°20'
அட்டம் பாதம் 2,3,4
சித்திரை பாதம் 1
கன்னி 176°40'
சித்திரை பாதம் 2 கன்னி 180°
சித்திரை பாதம் 3,4
சுவாதி பாதம் 1,2
துலாம் 193°20'
சுவாதி பாதம் 3,4
விசாகம் பாதம் 1,2
துலாம் 206°40'
விசாகம் பாதம் 3 துலாம் 210°
விசாகம் பாதம் 4
அனுடம் பாதம் 1,2,3
விருச்சிகம் 223°20'
அனுடம் பாதம் 4
கேட்டை பாதம் 1,2,3
விருச்சிகம் 236°40'
கேட்டை பாதம் 4 விருச்சிகம் 240°
மூலம் தனுசு 253°20'
பூராடம் தனுசு 266°40'
உத்திராடம் பாதம் 1 தனுசு 270°
உத்திராடம் பாதம் 2,3,4
திருவோணம் பாதம் 1
மகரம் 283°20'
திருவோணம் பாதம் 2,3,4
அவிட்டம் பாதம் 1
மகரம் 296°40'
அவிட்டம் பாதம் 2 மகரம் 300°
அவிட்டம் பாதம் 3,4
சதயம் பாதம் 1,2
கும்பம் 313°20'
சதயம் பாதம் 3,4
பூரட்டாதி பாதம் 1,2
கும்பம் 326°40'
பூரட்டாதி பாதம் 3 கும்பம் 330°
பூரட்டாதி பாதம் 4
உத்திரட்டாதி பாதம் 1,2,3
மீனம் 343°20'
உத்திரட்டாதி பாதம் 4
ரேவதி பாதம் 1,2,3
மீனம் 356°40'
ரேவதி மீனம் 360°

3 Sept 2012

சோதிடத்துக்கான வானியல் அடிப்படை

சோகி மற்றும் கை ரேகை பார்த்து குறி சொல்லுதல்
 
 
             கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாறு:
  1. சூரியன் (ஞாயிறு Sun)
  2. சந்திரன் (திங்கள் Moon)
  3. செவ்வாய் (Mars)
  4. புதன் (அறிவன் Mercury)
  5. குரு (வியாழன் Jupiter)
  6. சுக்கிரன் (வெள்ளி Venus)
  7. சனி (காரி Saturn)
  8. இராகு (நிழற்கோள்)
  9. கேது (நிழற்கோள்)
                   கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:
  1. மேடம் (மேஷம்)
  2. இடபம் (ரிஷபம்)
  3. மிதுனம்
  4. கர்க்கடகம் (கடகம்)
  5. சிங்கம் (சிம்மம்)
  6. கன்னி
  7. துலாம்
  8. விருச்சிகம்
  9. தனு (தனுசு)
  10. மகரம்
  11. கும்பம்
  12. மீனம்

2 Sept 2012

தமிழர் சோதிடம்














சோதிடம்
Venice ast sm.jpg

S ari.gif
S tau.gif
S gem.gif
S can.gif
S leo.gif
S vir.gif
S lib.gif
S sco.gif
S sag.gif
S cap.gif
S aqu.gif
S pis.gif
மேஷம் • ரிஷபம் • மிதுனம் • கடகம் • சிம்மம் • கன்னி • துலாம்
விருச்சிகம் • தனுசு • மகரம் • கும்பம் • மீனம்
சோதிடம் உள்ளடக்க வகைகள்
——————
குறிப்புதவிக்கு
பட்டியலை விரிவுபடுத்தவும்

——————
[] சோதிடம்
[×] அஷ்டகவர்கம்
[×] இராசிகள்
[×] இலக்கினங்கள்
[×] குறி கூறுபவர்கள்
[×] சீன சோதிடம்
[+] சோதிட நூல்கள்
[×] திதிகள்
[×] சோதிட நட்சத்திரங்கள்
[×] யோகங்கள்
விரைவு இணைப்பு: கிளைகள்
சீன முறை • மருத்துவ சோதிடம் • கிளி சோதிடம் • நிதியியல் சோதிடம் • இடவமைப்பு சோதிடம்

தமிழகக் கிராம மக்களிடம் கிளி சோதிடம் பார்க்கும் பழக்கமுள்ளது.
 
 
சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒரு துறையாகும். சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர். உலகின் பல பகுதிகளிலும் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பத்திரிகைகள் சோதிட ரீதியான அன்றாட பலன்களைத் தாங்கிவருவதே இதற்குச் சான்று.
கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்.

30 Aug 2012

புதுமையாக இடம்பெற்ற சில பழக்கங்கள்

          பண்டைத்தமிழரின் மண மரபில் இடம் பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் அமைந்து காணப்படினும் புதியவைகளும் காப்பியங்களில் இடம்பெற்றுள்ளன. பண்டைத் தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம் மற்றும் பெருங்கதையில் காணப்படுகிறது.
  • காப்பு நூல் கட்டுதல்
  • மங்கல நீர் கொண்டு வருதல்
  • மண மக்கள் ஒப்பனை
  • மணமகன் அழைப்பு
  • வேள்வித்தீ
  • அம்மி மிதித்தல்
  • பாத பூசை செய்தல்
  • அருந்ததி காட்டல்
  • அறம் செய்தல்
  • மங்கல அணி
  • சீதனம் கொடுத்தல்
இது போன்று புதியனவாக தமிழர்களின் திருமணத்தில் புதிதாக இடம் பெற்றன.

29 Aug 2012

நகரை அழகு செய்தல் & மணமேடை ஒப்பனை

நகரை அழகு செய்தல்

                    மன்னர் மண வினைகளில் நகரினைப் பொலியச் செய்தல் சிறப்பிடம் பெறுகிறது. மக்களும் ஒருங்கிணைந்து கூடி மணவினைச் செயல்களில் ஈடுபட்டனர். மங்கலச் செயல்களாக அரண்மனை வாயில்களில் கமுகு, வாழை ஆகியவற்றைத் தொங்கவிடுதல், மாலைகள் அணிவித்து அகில்புகையூட்டுதல், அழகிய வண்ணக் கோலமிடுதல் போன்ற செயல்களை மேற்கொண்டனர்.

மணமேடை ஒப்பனை

            மணவறை எனப்படும் நிலத்தை திருமகளின் இடை போலப் புனைந்தனர். வண்ணப் பொடிகளால் கோலமிட்டனர். மங்கலமாகப் பெரிய தவிசை (இருக்கை) இட்டனர். பொற்காசும், மணியும், முத்தும் குவிக்கப்பட்டன. மங்கலகரமாக விளக்குகள் எழுந்தன. புகைகள் எழுந்தன. பெண்கள் கவரி ஏந்தி நின்றனர். இச்செயல்கள் மன்னரின் மணமேடைகளில் இடம் பெற்றன.

28 Aug 2012

மங்கல ஒலி

               திருமணம் நடக்கும் வீட்டில் சங்கொலி, பறையொலி ஆகியவை முழங்கும். மணச் சடங்கு நடைபெறும் போது திருமண முழவு(மத்தளம்) பெரிய முரசு, மணமுழவு மணமுரசு ஆகியவை ஒலித்து மணவினையை நகர மக்கட்கு உணர்த்தினர். அரசர் மணவினையில் பல்வகை இசைக்கருவிகளின் ஒலிகள் முழங்கின. ஆறு நாட்கள் கழிய எங்கும் பரபரப்புடன் வெண்சங்கு முழங்கின. குற்றமில்லா யாழும், குழலும், தண்ணுமையும், அழகிய முரசும் முழங்கின. கம்பராமாயணம் இதனை
" மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை,பேரிகை பொங்கின;
மறையவர் புகலும் நான்மறை, கங்குலின் ஒலிகளும்
மாகடலும் போன்றதே"
எனக் குறிப்பிடுகிறது.

26 Aug 2012

தெய்வங்களுக்குப் படைத்த உணவு வகைகள்

                 பால் உலையில் வெந்த வெண்சோறு, தேன் உலையில் வெந்த தேன்சோறு, புளிநீரில் வெந்த புளிஞ்சோறு, கருப்பஞ்சாற்றில் வெந்த இன்னடிசில், நெய்ப்பொங்கல் ஆகியவற்றை பொன், வெள்ளி, மணிச் செபம்புகளாலான அகல்களில் நிறைத்துத் தெய்வங்களுக்கு மடை கொடுத்தனர். இறைவழிபாட்டில் மணமகள், அவளது தோழியர், பெண்டிர் ஆகியோர் இடம்பெற்றனர். இல்லுறை தெய்வத்திற்கு மலர் தூவி வழிபட்டனர்.

25 Aug 2012

இறைவழிபாட்டிற்குரிய பொருள்கள்

திருமணச்சடங்கில் பயன்படும் மங்கலப்பொருள்கள்
 
 
              தக்கோலம் , ஏலக்காய், லவங்கம், சாதிக்காய், கற்பூரம் எனும் ஐவகை மணப் பொருள்களுடன், வெற்றிலையையும் வலப்பக்கம் வைத்து, சந்தனத்துடன், மஞ்சளையும் தடவி இரும்பாற் செய்த விளக்கினிடத்தில் நிறைக்கப்பட்ட நெருப்பு நிறைகளைச் சுற்றி நறும்புகையூட்டி, ' தேவீர் நீர் மலையிடத்திருந்தாலும், மண்ணிடத்திருந்தாலும், விண்ணிடத்திருந்தாலும் இங்கு வந்து இந்தப் படையலைப் பெற்று மணமக்களுக்கு மங்கலத்தைக் கொடுக்க வேண்டும் ' என்று தேவர்களை வேண்டினர். பந்தக்கால் தோறும் உறையும் நான்முகக்கடவுள் முதலிய தெய்வங்களுக்கு அமைந்த இடங்களை செம்முது பெண்டிர் தம்மைக் கன்னிப் பெண்கள் சூழ்ந்திருக்க வலம் வந்து, உளுந்து, நெல், உப்பு, மலர், வெற்றிலைச்சுருள்,சந்தனம் ஆகிய மங்கலப் பொருட்களையும் தமது கைகைகளில் அடக்கிக் கொண்டு, காந்தள் இதழ் போன்ற தம் மெல்லிய கரம் குவித்து எல்லீரும் இங்கணம் ஏழுமுறை வணங்குமின் என உளுந்து முதலியவற்றைத் தூவி வணங்கிக் காட்டுவர். அக்கன்னியரும் அவ்வாறே வணங்கித் தெய்வங்கட்கு மடை கொடுப்பர். சங்க இலக்கியங்களில் பந்தல் காலில் உறையும் தெய்வங்களின் பெயர் சுட்டப்படவில்லை. இடைக்காலத்தில் நான்முகக்கடவுள் எனப் பகுறிப்பிடப்படுதலைக் காணலாம்

23 Aug 2012

மணப் பந்தல் அமைத்தல்

தற்காலத்தில் வீட்டில் மணவினை நடைபெறுவதைக் குறிக்க அமைக்கப்படும் தென்னை ஓலை மற்றும் வாழைத் தோரணங்களால் அமைக்கப்பட்டுள்ள பந்தல்
 
           தமிழர் மணவினைகளில் மனச்செயல் இனிதே நிறைவேறி வாழ்நாள் முழுமையும் வளம் பெற இறைவழிபாடு முதலிடம் பெற்றது. மணம் நடைபெறும் வீட்டின்கண் பந்தல் அமைப்பர். அப்பந்தலை "மணப்பந்தல்" எனச் சுட்டுவர். மணப் பந்தலில் நாற்பத்தைந்து காலகள் இடம் பெற்றன. ஒவ்வொரு காலிலும் ஒரு தெய்வம் நிலை பெற்றதாகக் கருதினர். அதனை
ஐயொன்பதின் வகைத் தெய்வநிலைஇய
கைபுனை வனப்பின் கான்முதல் தோறும்
ஆரணங்காகிய வணிமுளையகல்வாய்" 
என்ற பெருங்கதை ப் பாடல் வழி அறியலாம். அந்தக் கால்கள் தோறும் கூலமுளைகளையுடைய நிறை குடங்கள் அழகுற அமைக்கப்படது. கணபதி பூசையுடன் மணப்பந்தல் அமைக்க நடுகின்ற முதல் பந்தக்காலை நல்ல நாள், நல்ல முழுத்தம் பார்த்து, மங்கல இசை முழங்க நடுதல் வழக்கம். இறை வழிபாடி நிகழ்த்திய பின் ஏனைய கால்கள் நட்டுப் பந்தல் அமைப்பர். இவை தமிழரிடம் பிற மொழியினரின் தொடர்பு காரணமாக இடம் பெற்ற செயல்கள் எனலாம்.

20 Aug 2012

மணவினை நிகழும் இடம்

    பழந்தமிழர் திருமணத்தை பெண்வீட்டில் நிகழ்த்துதலை மரபாகக் கொண்டிருந்தன்ர்.களவொழுக்கம் காரணமாக உடன்போக்கு நிகழும்பொழுது தலைவன் தலைவியைத் தன்னுடன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று மணம் செய்து கொள்வது மரபாக இருந்தது. கற்பு மணம் பெரும்பாலும் மணமகள் இல்லத்திலேயே நிகழ்ந்தது. இதனை
" நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்
எம்மனை வதுவை நன்மணங்கழிகெனச்
சொல்லி னெவனோ மற்றே வெண்வேல்
வையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே" 
            என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம். ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளி வருதல் கூடாது; பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின் படி பரிசம் போடுதலும் பெண்வீட்டில் திருமணம் செய்தலும் இடம் பெறுவது தமிழர் வழக்கமாக இருந்தது. காப்பிய காலத்திலும் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே மணவினை நிகழ்ந்தது. இன்று அவரவர் வசதிக்கும் வாய்ப்பிற்கும் ஏற்ப இறைவன் முன்னிலை, திருமணக்கூடம், பொதுமன்றில்கள், மணமகன் இல்லம் ஆகிய இடங்களிலும் மணம் நிகழ்த்துதல் இடம் பெறுகிறது.

19 Aug 2012

நகருக்கு உரைத்தல்

     மணம் நிச்சயிக்கப்பட்ட பின் மணச் செய்தியினை ஊருக்கு அறிவித்தல் தமிழர் மரபாகும். சங்கப் பாடல்களில் இவை இடம் பெறவில்லை. அக்காலத்தில் இயற்கையோடு இயைந்த மணம் மேற்கொண்டமையால் தங்கள் சுற்றாம் சூழ முடித்துக் கொண்டனர். பிற்காலத்தில்
பல்லார் அறியப் பறையறிந்து நாள் கேட்டுக்
கலியாணஞ் செய்து கடிபுக்க - மெல்லியள்"
      என நாலடியார் கூறுகிறது. சிறிய ஊராயின் பறையறிவித்தும், தொடர்ந்த காலத்தில் மன்னர், வணிகர் ஆகியோர் முரசறைந்து மண்ச் செய்தியை நகருக்கு உறைத்தனர். யானையின் மீது அணிகலன்களை அணிந்த பெண்களை அமர்த்தி முரசறைந்து அறிவித்தனர். பெருங்கதையில் மணச் செய்தியைக் கூறும் போது 'வெள்ளை ஆடையை உடுத்தியும், வெள்ளைச் சந்தனத்தை உடலில் அணிந்து, அசையும் மஞ்சிகையைக் (காதணி) காதில் அணிந்து, மாலைகள் ஆட முத்து மாலை புணைந்தும், போர்க்களத்திலே தலைமை கொண்ட யானையின் மீது வன்முரசை ஏற்றினர் என்று முரசறைவோன் தோற்றம் கூறப்படுகிறது. சிந்தாமணியில் மன்னனின் மணவினை அறிவிக்க முரசறைவோன் யானை மீதமர்ந்து, மணச் செய்தியை ஊருக்கு உணர்த்தினான். முரசு சுமக்கும் யானைக்கும் வெள்ளணியும், மாலையும், திலகமும் அணிவித்தனர் என்று சுட்டுகிறது. பெரிய புராணத்தில் புனிதவதி, ( காரைக்கால் அம்மையார் )பரமதத்தன் ஆகியோர் திருமணச் செய்தி ஓலையில் எழுதி அணுப்பிய செய்தியைக் காண முடிகிறது. மனன்ர் மண வினையில் மக்கள் பங்கு அதிகம் இருந்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தம் கடமை ஆற்றிய நிலையைக் காண முடிகிறது. மேலும் முரசறைவோன் மக்களை அணிகலண்கள் பலவற்றை அணிந்து கொள்ளும்படியும் அவை அரச கட்டளைஆகையால் இனிய பால் சோற்றாஇயல்லாமல் பிறாவற்றை ஏழு நாட்கள் உம் மனம் விரும்பினும் உண்ணாதிருப்பீராக " என்று அறிவுருத்தி, பின்பு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய செய்தியையும் கூறுகிறான். இதனால் மன்னருக்கும் மக்களுக்கும் இடையே இருந்த உறவும் மக்களின் மகிழ்ச்சியை நல்ல நாளில் விரும்பி கொல்லாமை முதலிய நோன்பு வலியுறுத்தப்ப்டுதலையும் அறியலாம். மண நாளின் போது இன்னா செயல்கள் எவையும் இடம் பெறாமல் அறவாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் புலனாகிறது.

18 Aug 2012

மண நாள் குறித்தல்

           தமிழர்கள் எந்தச் செயலைச் செய்தாலும் நல்ல நாள் பார்த்துச் செய்வதில் நம்பிக்கையுடையவர்கள். மணவினை முடித்தற்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம், மங்கல வினைக்குரிய பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய அனைத்தியும் வல்லவரிடம் கேட்டு முடிவு செய்தனர்.
" மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண்டிங்கள்"
   மேலும் வளர்பிறை நாள்களையும், பகலின் முற்கூறான காலைப் பொழுதையுமே மண நிகழ்விற்குரிய நல்ல நேரமாகக் கருதினர். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோவலன் - கண்ணகி மணவினை சந்திரன் உரோகிணி என்னும் நட்சத்துடன் கூடும் வேளையில் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். "வானூர் மதியஞ் சகடனைய" கம்ப ராமாயணத்திலும் வசிட்டர் மணவினை நிகழ்த்தற்குரிய நாளைக் கூறினார் என்றும் அறியலாம். இதனால் நல்ல நேரம் பார்த்தல் பெரும்பாலும் எல்லா மரபினராலும் பின்பற்றப்பட்டது.

12 Aug 2012

பொருத்தம் பார்த்தல்

                 பண்டைத்தமிழகத்தில் களவு நெறி இருப்பினும் அக்களவு நெறி கற்பாகிய திருமணத்தில் முடிந்தது. இரு பெற்றோர்களில் ஒப்புதல் பெற்று மணம் நிகழ்த்தலை மரபாகக் கொண்டனர். அவ்வாறான கற்பு நெறி நிறந்து விளங்க மணப் பொருத்தம் பார்த்தனர். திருமனத்திற்குரிய பொருத்தங்களாக
" பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு, நிறுத்த காமவாயில்,
நிறையே, அருளே, உணர்வோடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"
என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பெருங்கதையில் மணப்பொருத்தம் எட்டு என்றும் அவை
  1. இளமை
  2. வனப்பு
  3. வளமை
  4. தறுக்கண்
  5. வரம்பில் கல்வி
  6. நிறைந்த அறிவு
  7. தேசத்தமைதி காத்தல்
  8. குற்றமில்லாத சூழ்ச்சி முதலியன ஆகும் எனக் குறிப்பிடுகிறது.
சீவக சிந்தாமணியில் குண மாலை-சீவகன் மணம் கணியரிடம் பொருத்தம் கேட பின்பே நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பதுமாவதியை சீவகன் மணந்த போது பெண்ணின் தந்தை சாதகம் பார்த்து, மணம் முடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தற்காலத்திலும் பத்து பொருத்தம் பார்த்தல் நிகழ்கிறது

11 Aug 2012

தமிழரின் திருமண நிகழ்வுகள்

           காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம் பெற்ற மண முறைகளைத் தவிர, நால்வகை வருணத்தவர் தம்குல முறைப்படியான மணவினைச் செயல்கள் இடம் பெற்ற நிலையும் காணப்படுகிறது. இது காப்பியங்களிலும் மரபாக இடம் பெற்றுள்ளது.
  1. பொருத்தம் பார்த்தல்
  2. மணநாள் குறித்தல்
  3. திருமண அழைப்பிதழ் அல்லது முரசு மூலமாக நகர மக்கட்கு உணர்த்துதல்
  4. மணவினை நிகழும் இடத்தை அலங்கரித்தல்
  5. சிறப்பு இறைவழிபாடு செய்தல்
  6. மங்கல ஒலி எழச்செய்தல்
  7. மணமேடை ஒப்பனை
ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளது.

7 Aug 2012

திணைக் கலப்பு & சேவை மணம்

திணைக் கலப்பு மணம்

சங்க கால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் இருந்த நிலை அகநானூறறுப் பாடல்  மூலம் அறிய முடிகிறது. மற்ற காப்பியங்களில் இது பற்றிய செய்திகள் இடம் பெற வில்லை.

சேவை மணம்

மணமகன் தான் விரும்பிய பெண்ணின் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சேவைகள் செய்தோ, தனது திறமைகளைக் காட்டியோ அப்பெண்ணை மனத்தல் சேவை மணம் எனப்படும். சீவக சிந்தாமணி யில் சீவகன் ஏமமாபுரத்தின் மன்னன் மகள் கனகமாலையை மனந்ததும், பெருங்கதையில் உதயனன் பதுமாவதியை மணந்ததும் இந்த சேவை மணத்தினைச் சார்ந்ததாகும்.

6 Aug 2012

பலதார மணம் & உறவு முறைத் திருமணம்


பலதார மணம்

ஒரு ஆண் பல பெண்களை மணக்கும் முறை பொதுவாக பழந்தமிழர் வாழ்வில் காண முடிகிறாது. சங்க இலக்கியங்களில் காமக்கிழத்தி, பொருள்வயின் கிழத்தி, இல்லக்கிழத்தி என்று பல மனைவியரைக் கொண்டமையை நோக்கும் போது மகட் பேறு மட்டும் கருதி மட்டுமே இப்பலதார மணம் நிகழ்த்தப் பெறவில்லை என்பதனை அறியலாம்.

உறவு முறைத் திருமணம்

உறவு முறைத் திருமணம் மணிமேகலை காப்பியத்தில் முதல் முதலாகச் சுட்டப்படுகிறது. மைத்துனன்-(வடசொல்)மணம் புரிதற்கு உரியவன் என்று பொருள். மணிமேகலைக் காலச் சமுதாய வழக்கில் வணிகர் குலத்திடையே இவ்வழக்கு இடம் பெற்றிருந்தது. வணிகரின் செல்வம், அவர்தம் குடியிலேயே எக்காலத்தும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் வருணப்பாகுபாடு, குலப்பாகுபாடு ஆகியவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர்.

3 Aug 2012

திருமண வகைகள்


கனடாவில் ஒருபால் திருமணம்
அமெரிக்காவில் பலமனைவி மணம்
 
திருமணங்கள் பல வகைப்படுகின்றன. பெரும்பான்மைத் திருமணங்கள் ஒர் ஆண், ஒரு பெண் ஆகிய இருவருக்கிடையே நடைபெறும் ஏற்பாடு ஆகும். எனினும் தற்காலத்தில் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடைபெறும் திருமணங்களுகும் சட்ட, அரசியல் முறையில் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவை ஒருபால் திருமணங்கள் எனப்படுகின்றன.ஆண் அல்லது பெண் ஒரே சமயத்தில் எத்தனை மனைவியரை அல்லது கணவன்மாரைக் கொண்டிருக்கலாம் என்பதிலும், ஒருவர் யாரைக் கணவனாக அல்லது மனைவியாக அடைய முடியும் என்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. மேலோட்டமாகத் துணைவர் எண்ணிக்கை அடிப்படையில் திருமணத்தை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்.
  • ஒருதுணை மணம்
  • பலதுணை மணம்
  • பலமனைவி மணம்
  • பலகணவர் மணம்
  • குழு மணம்

29 Jul 2012

பரிசம் கொடுத்து மணத்தல்


மணமகளின் பெற்றோர் தனது மகளுக்கு வழங்கிய சீர்வரிசைப் பொருள்கள்
 
மணமகன் பரிசம் கொடுத்து மணமகளின் பெற்றோர் ஒப்புதலுடன் மணத்தல் பரிசம் கொடுத்தல் எனப்படும். இப்பரிசம் அணிகலன், பணம், நிலம் போன்ற சொத்துக்களாக வழங்கப்பெறும் மணமகளின் பெற்றோர் கேட்கும் பரிசுத் தொகையினைக் கொடுத்து, அவர்கள் ஒப்புதல் பெற்று மணந்தமைக்குச் சான்று உண்டு
" உறுமென கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிலை விலையே "என்ற குறிப்பு இதனை உனர்த்துகிறது. சில சமயம் ஏதேனும் காரணம் குறித்து மணமகன் தரும் பரிசத்தை மணமகளின் பெற்றோர் ஏற்காமல் மகளைக் கொடுக்கவும் மறுப்பர்.தற்காலத்தில் பரிசம் கொடுத்து மகளை மணத்தல் சில சமூகத்தாரிடம் காணப்படுகிறது. அதோடு பொருள் பெற்று மணத்தல் என்பதும் உள்ளது.

28 Jul 2012

போர் நிகழ்த்தி மணமுடித்தல் & துணங்கையாடி மணத்தல்

போர் நிகழ்த்தி மணமுடித்தல்

தமிழர்கள் வீர உணர்வை விளக்கும் வகையில் 'மகட்பாற்காஞ்சி' என்னும் துறையை தொல்காப்ப்பியம் சுட்டுகிறது. பண்டைத் தமிழர் சமுதாயத்தில் ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது, போரிட்டு வெற்றி பெற்றுத் தான் விரும்பிய பெண்ணை மனந்து கொள்ளுதல் என்ற வழக்கம் இடம் பெற்றமைக்குப் புறநானூறு என்ற இலக்கியத்தில் உள்ள பாடல்கள் சான்று பகர்கின்றன.

துணங்கையாடி மணத்தல்

துணங்கையாடுதல் என்பது மகளிர் விளையாட்டில் ஒன்று. விழாக்காலங்களில் துணங்கையும், மன்னர்ப்போரும் ஒருங்கே நிகழும். துணங்கைக் கூத்துக்குரிய நாள் நிச்சயிக்கப்பட்டு, அந்நாளில் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே துணங்கையும், மன்னர்ப்போரும் நிகழ்த்திய செய்தியை குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது.

26 Jul 2012

மடலேறுதல்

           பனை மடலைக் குதிரையாக ஆக்கி, எறியூர்தலை "மடன்மா ஏறுதல்' என்றும் ' மடல்' என்றும் சுட்டினர். இச்செயலை மேற்கொள்வதன் மூலம், தலைவனின் காதன் வன்மையை ஊருக்கு உணர்த்துதல், அதன் வழியாக தான் விரும்பிய மணமகளைப் பெற்று மணத்தல் என இது அமைகிறது. மடலேறி மணம் முடித்தலைப் பெருந்திணையின் பால் படுத்திக் கூறுவார் தொல்காப்பியர். பழந்தமிழர் இலக்கியங்களிலேயே இது குறைவாகவே இடம்பெற்றுள்ளது. தமிழரின் வாழ்க்கையில் மடலேறுதல் என்பது அருகியே வழக்கில் இடம்பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மடலேறுதல் இல்லை. ஏனெனில் நாணம் துறந்து மடலேறுதல் என்பது காமம் மிக்க கழிபடர் தலைவனுக்கு உரிய ஒன்றாகும். மடலூரும் தலைவனே இச்செயலை நாணமிக்க செயலாகக் கருதுவதாக குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது. இவ்வழக்கு தற்போது இல்லை.

23 Jul 2012

மரபு வழி மணம் & ஏறு தழுவுதல்

மரபு வழி மணம்

இதனைப் பலரறி மணம் என்றும் இயல்பு மணம் என்றும் கூறுவர்.பெண்ணின் பெற்றோர் மணமகனிடம் ' யான் கொடுப்ப நீ மணந்து கொள்' என்று வேண்டி மணமுடித்தலாகும். இதுவே சமூகத்தில் பெரு வழக்காக இருந்தது

ஏறு தழுவுதல்

தமிழரின் வீர உணர்வைக் காட்டும் செயல் 'ஏறு தழுவுதல்' ஆகும். இது கலித்தொகையில் முல்லைக்கலியில் ஆயர் மத்தியில் நிலவிய மணவினைச் சடங்கு எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல் ஆகும். காளையை அடக்கி தழுவி நிற்பவனுக்கே தலைவி உரியவள் என்ற குறிக்கோளுடன் ஏறு வளர்த்தனர். அவ்வேற்றினைத் தழுவி அதற்குப் பரிசுப்பொருளாக ஆயர் மகளை மணப்பதற்குத் துணிந்த இளைஞர்களாக ஆயர்கள் இருந்தனர். முல்லை நில ஆயர்கள் ஆடு, மாடு போன்ற விலங்கினங்களைப் பாதுகாக்கும் தொழிலையுடையவர்கள். அவற்றிற்குப் புலி முதலிய விலங்குகளால் துன்பம் நேராமல் காக்கும் பொருட்டும், கள்வர் கவர்ந்து செல்லாமல் காக்கும் பொருட்டும், அவர்கள் வீரமிக்கவராக இருத்தல் இன்றியமையாதது. இதனால் ஆயர் தம் மகளைத் திருமணம் செய்ய முன்வருபவரின் ஆற்றலை அறிந்த பின்னரே மகளை மணம் முடித்துக் கொடுக்கும் வழக்கம் உடையவராக இருந்தனர் என்பதை அறியலாம்.

20 Jul 2012

மணமுறைகள்

         பொருள் கொடுத்தும், சேவை புரிந்தும் மணத்தல், திறமையை வெளிக்காட்டும் வகையில் வீரத்தின் காரணமாக மணத்தல், போர் நிகழ்த்தி மணத்தல் ,தன் காதல் மிகுதியைக் காட்டி மணத்தல் ஆகிய இவ்வகை மண்முறைகள் களவுநெறி, கற்புநெறி ஆகிய இருவகை மண முறைகளிலும் இருந்தது. உறவு முறைத்திருமணம், கலப்புமணம் ஆகிய வகைகளில் கூட களவு மணமும் இருந்தது என்பதனை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.

        இதன் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் வாயிலாக தெரியவரும் தமிழரின் மணமாக
  1. மரபு வழி மணம்
  2. சேவை மணம்
  3. போர் நிகழ்த்தி மணம்
  4. துணங்கையாடி மணம்
  5. பரிசம் கொடுத்து மணம்
  6. ஏறு தழுவி மணம்
  7. மடலேறி மணம்
ஆகிய மண முறைகளைக் காணலாம்.

19 Jul 2012

பழந்தமிழரும் திருமணமும்

                    பண்டைத் தமிழர் தன் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர். மணச் சடங்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர். 'கரணம்' என்ற திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று. இனவே, களவு மணம், கற்பு மணம் இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாக அன்று விளங்கியதை அறியலாம். பெற்றோர் நடத்தி வைக்கும் மணவாழ்க்கையே 'கற்பு நெறி' எனப்பட்டது.

18 Jul 2012

வரைவு

            வரை என்பதற்கு மலை, வரையறை என்ற பொருள்கள் உள்ளன. காதலர் பழகுவதை வரையறைப் படுத்துதல் (ஒழுங்குமுறைப் படுத்துதல்)என்ற நிலையில் 'வரைவு' என்பது மணத்தைக குறித்தது. வரைதல் வேட்கை என்பது மணந்து கொள்ளும் விருப்பத்தைக் குறிக்கும். இதனைத் தொல்காப்பியம் "வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் என்று ஆயிரண்டென்ப" என இரு வகையாகக் கூறுகிறது. எனவே வரைதல் என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல்லாக பண்டைத் தமிழர் வழக்கில் இடம் பெற்றமையைக் காணலாம். ஆயினும் இது பின்னர் வழக்கொழிந்துள்ளது.

14 Jul 2012

மன்றல் & வதுவை


மன்றல்

'மன்றம் ' என்பது ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. பலர் முன்னிலையில் மேடையிட்டு அதன் மேல் மணமக்களை அமரச் செய்து, மணவினைச் செய்வித்தல் என்ற பொருளில் 'மன்றல்' என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாக இடம்பெற்றது எனலாம்.' 'இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென' என்பதால் இதனை அறியலாம். 'மன்றல்' என்ற சொல் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது.

வதுவை
வதுவை என்ற சொல் 'வதிதல்' என்ற பொருள் தரும். இது 'கூடிவாழ்தல்' என்ற பொருளில் மணத்தைக் குறித்தது. இச்சொல் சிலம்பு, சிந்தாமணி, பெருங்கதை, கந்த புராணம், போன்ற இலக்கியங்களில் திருமணத்தைக் குறிக்கவே பயன் படுத்தப்பட்டுள்ளது.

13 Jul 2012

கரணம்

கரணம் என்ற சொல் திருமணத்தைச் சுட்டும் பொருளில் பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது.
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணமென்ப
என்று தொல்காப்பியத்தில் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், 'கற்பெனப்படுவது கரணமொடு புணர' என்று கூறுமிடத்தில் 'கரணமொடு புணர' என்பதற்கு வேள்விச் சடங்கோடு கூடிய மணம் என உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். 'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே','புணர்ந்துடன் போகிய காலையான' என்ற நூற்பாவாலும் இதனை அறியலாம். மேலும் கற்பியலில் தொடந்து ஐந்து நூற்பாக்களில் கரணம் என்பது மணத்தினைச் சுட்டுவதாகவே அமைந்துள்ளது, ஆனால் 'கரணம்' என்ற சொல் இன்று வழக்கில் இல்லை.

12 Jul 2012

கடி-மணம்

               'கடி' என்பது பல பொருள் தரும் உரிச்சொல் ஆகும். 'கடி' என்ற சொல்லுக்கு நீக்குதல், காப்பு என்று பொருள் கூறுவர். மணமகளின் கன்னித்தன்மை நீங்கி, கற்பு வாழ்வு மேற்கொள்ளல் என்ற நிலையிலும், ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் 'கடி' என்ற சொல் திருமணத்தைக் குறித்தது. "கடிமகள்". "வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து" போன்ற குறிப்புகளால் காப்பு என்ற பொருளில் 'கடி' என்ற சொல் இடம் பெறுதலைக் காணலாம்.
கடிமணம் என்பது நல்ல மணம், நன்மை பெற உதவும் மணம் என்றும் பொருளைத் தருகிறது. மணநாள் விளக்கம் என்ற நூலில் 'கடிநாள் கோலத்து காமன் இவனென' என்று மண நாளில் இடம் பெற்ற ஒப்பனை சுட்டப்படுகிறாது. இலக்கிய வழக்கில் கடி என்ற சொல் மணத்தையும் , மணத்தொடர்புடைய மண நாள், மண வேளை ஆகியவற்றைச் சுட்டவும் பயன்படுகிறது. சீவக சிந்தாமணியில் 'கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும் 'கடிமணம் எய்தும் களிப்பினால்' என்றும் சுட்டப்படுதலால் கடி, மணம் என்ற இரு சொற்களும் இணைந்தும் திருமணத்தைக் குறிக்க வழக்கில் இடம் பெற்றமையை உணரலாம்.

10 Jul 2012

திருமணம்- சொல்லும் பொருளும்

           மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பினும், பழங்கால வழக்கில் இச்சொல் பல பொருளை உடையதாக இருந்தது. 'மண்ணுதல்' என்ற சொல்லின் பொருள் கழுவுதல், நெருங்குதல், கலத்தல், கூடுதல், அழகுபெறுதல் எனப்பல. திருமணத்தைக் குறிக்கும் ' மணம் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பது தெரியவில்லை. மண் இயற்கையிலேயே மணம் உடையது. அதனை மண் மணம் என்பர். இது தமிழர் வழக்கு. இல்லறத்திற்கு நுழைவாயிலாக அமைவதனை 'மணம்' என்ற சொல்லால் குறிப்பிட்டதன் நோக்கம் மண்ணைப் (நிலத்தை) போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வன்மை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை என்று கூறுவோரும் உளர். மனமொத்து, வாழ்வு முழுவதும் மணம் பெற்று நிகழ்வதற்கு ஏதுவான இந்நிகழ்ச்சியை மணம் என்று பெயரிட்டனர். சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு என்ற அடை கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது.