25 Sept 2012

வகைப்பாடு(சூரியன்)

           சூரியன் விண்மீன் வகைப்பாட்டில் G2V வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது. G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5 ,500 °C ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறத்தினைக் கொண்டிருப்பதாகத் திரு.சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு விளக்குகிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. சூரியன் பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் சூரியனை செம்மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ காட்டுகிறது 

           G2V என்ற குறியிட்டில் V என்ற எழுத்து மற்ற பல விண்மீன்களை போன்று சூரியனும் தனது ஆற்றலை அணுக்கரு புணர்தல் பெறுவதை குறிக்கிறது. சூரியனில் ஹைட்ரஜன் கருவும் ஹீலியம் கருவும் சேர்வதால் ஆற்றல் உருவாகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் சுமார் 100 மில்லியன் G2 வகை விண்மீன்கள் உள்ளன. அவற்றில் சூரியனும் ஒன்று. சூரியன் பால் வழியில்(நமது விண்மீன் மண்டலம்) உள்ள பல சிவப்பு குறுமீன்களை விட 85% வெளிச்சமானது. சூரியன் தோராயமாக 24 ,000 to 26 ,000 ஒளியாண்டுகள் அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை 225–250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் கோளொழுக்க வேகம் ( orbital speed ) சுமார் 251 கிமீ/வினாடி . இந்த அளவீடுகள் இப்போதைய அறிவின்படி, நவின கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது. இவை வருங்காலத்தில் மாற வாய்ப்புள்ளது. மேலும் சூரியன் சுற்றி வரும் நமது விண்மீன் மண்டலமும் அண்ட மையத்தை கொண்டு வினாடிக்கு 550 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவது வியப்பூட்டும் தகவலாகும்.

Moon transit of sun large.ogg
நிலவு கதிரவனைக் கடப்பதை சூரிய ஆராய்ச்சிக் கலமான STEREO B பதிந்துள்ள குறும்படம்
 
 
 
                 சூரியன் விண்மீன் வகைபாட்டில் G2V வகையை சார்ந்ததாகக் குறிக்கப்படுகிறது. மேலும், விண்மீன்கள் அவற்றில் உள்ள உலோகங்களால் வகை செய்யப்படுகின்றன.
  1. உலோகச்செறிவு மிக்க விண்மீன்கள் (population i )
  2. உலோகச்செறிவு இல்லா விண்மீன்கள் (population ii )
  3. உலோகமில்லா விண்மீன்கள் (population iii )
                   இவற்றுள் சூரியன் முதல் வகையான உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையை சார்ந்தது. சூரியன் உருவாக்க சூரியனுக்கு அருகில் உள்ள மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் (supernova) அதிர்ச்சி அலைகளே காரணமாய் இருக்கக் கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய விளைவுகள் வேதியல் தனிமங்கள் மிகுந்த சூரியன் போன்ற விண்மீன்களை எளிதாக உருவாக்க காரணம் காரணம் ஆகும்.

22 Sept 2012

ஞாயிறு அல்லது சூரியன்

ஞாயிறு (விண்மீன்)

ஞாயிறு
சோகோ(SOHO) விலிருந்து ஞாயிற்றின் படிமம்
பெரிய படிமம்
அவதானிப்புத் தரவுகள்
பூமியிலிருந்து
தொலைவு (சராசரி)
1.496×1011 மீ
காணொளி
வெளிச்சம் (V)
-26.8m
வெளிச்சத்
தனிமுதல் அளவு
4.8m
இயற்பியல் பண்புகள்
விட்டம் 1,392,000 கிமீ
சார்பு விட்டம்(dS/dE) 109
மேற்பரப்பளவு 6.09 × 1012 கிமீ2
கன அளவு 1.41 × 1027 மீ3
நிறை 1.9891 × 1030 கிகி
பூமி ஒப்புத் திணிவு 332 946
அடர்த்தி 1411 கிகி மீ−3
பூமி ஒப்பு அடர்த்தி 0.26
நீர் சார்பான அடர்த்தி 1.409
மேற்பரப்பு ஈர்ப்பு 274 மீ நொடி−2
பூமி சார்மேற்பரப்பு ஈர்ப்பு 27.94 கிராம்
மேற்பரப்பு
வெப்பநிலை
5778 K
சூழ்புலத்தின்
வெப்பநிலை
5 × 106 K
ஒளிர்வு (LS) 3.827 × 1026 J s−1
சுற்றுப்பாதைசார் இயல்புகள்
சுழற்சிக்காலம்  
மையக் கோட்டில்: 27நா 6ம 36நி
At 30° latitude: 28d 4h 48m
At 60° latitude: 30d 19h 12m
At 75° latitude: 31d 19h 12m
கலக்டிக் மையம் பற்றிச்
சுற்றும் காலம்
2.2 × 108 ஆண்டுகள்
ஒளிக்கோள உட்கூறுcomposition
ஐதரசன் 73.46 %
ஈலியம் 24.85 %
ஆக்சிசன் 0.77 %
கரிமம் 0.29 %
இரும்பு 0.16 %
நியோன் 0.12 %
நைதரசன் 0.09 %
சிலிக்கன் 0.07 %
மக்னீசியம் 0.05 %
கந்தகம் 0.04 %

              ஞாயிறு அல்லது சூரியன் (Sun) மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, ஞாயிற்று மண்டலத்தின் மையத்தில் உள்ள, ஞாயிற்று மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன. ஞாயிற்றின் எடை மட்டுமே பரிதி மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது . பரிதிக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு தோராயமாக 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். இத்தொலைவை ஒளி சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரம் பரிதி ஆற்றலேயாகும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களில் சேகரிக்கப்படும் பரிதி ஆற்றல், பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும். மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் பரிதியைச் சார்ந்தே உள்ளன.

           பரிதி காந்த ஆற்றல் மிகுந்த விண்மீன் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரிதிக் காந்தப்புலம் ஒவ்வெரு வருடமும் தன்னிலையில் சிறு மாற்றம் அடைவதுடன், பதினொரு வருடங்களுக்கு ஒருமுறை நேர்மாறாகிறது. பரிதிக் காந்தப்புலம், பரிதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விளைவுகளை கதிரவனுயிர்ப்பு (solar activity ) என்று குறிப்பிடுவர். உதாரணமாக சூரியமரு (sunspot) , சூரிய எரிமலை (solar flare ), சூரிய சூறாவளி (solar winds) ஆகியவை சூரிய காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் ஆகும். சூரிய மண்டல உருவாக்கத்தில் சூரியனில் நடைபெறும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் பெரும் பங்காற்றி உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் மூலம் புவியின் அயன மண்டலம் வடிவத்தில் மாற்றம் அடைகிறது.

            கதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஈலியம் (சுமார் 24% நிறை , 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன் , கந்தகம் , மக்னீசியம் , கரிமம், நியான் , கல்சியம் , குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

21 Sept 2012

பாதம்

               புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை.ஒவ்வொரு விண்மீனும் நான்கு பாதங்கள் கொண்டவை. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனக் குறிப்பிடப் படுகின்றன.ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள் (நிமிடவளைவுகள்). இதன் மூலம் இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்) 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இதிலிருந்து இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் (ஓரைகள்) ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை அடக்கியுள்ளது.

அட்டவணை

                                         கீழேயுள்ள அட்டவணை நட்சத்திரங்களையும், பாதங்களையும், அவற்றோடொத்த இராசிகளையும் சூரியன் அந்த இராசிகளில் உள்ள மாதங்களையும் காட்டுகின்றது.
நட்சத்திரம் பாதம் இராசி இராசிக்கான தமிழ் மாதம்
1. அச்சுவினி முதலாம் பாதம் மேடம் சித்திரை
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
2. பரணி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
3. கார்த்திகை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம் இடபம் வைகாசி
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
4. ரோகிணி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
5. மிருகசீரிடம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் மிதுனம் ஆனி
நான்காம் பாதம்
6. திருவாதிரை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
7. புனர்பூசம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம் கர்க்கடகம் ஆடி
8. பூசம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
9. ஆயிலியம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
10. மகம் முதலாம் பாதம் சிங்கம் ஆவணி
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
11. பூரம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
12. உத்தரம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம் கன்னி புரட்டாசி
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
13. அத்தம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
14. சித்திரை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் துலாம் ஐப்பசி
நான்காம் பாதம்
15. சுவாதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
16. விசாகம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம் விருச்சிகம் கார்த்திகை
17. அனுஷம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
18. கேட்டை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
19. மூலம் முதலாம் பாதம் தனு மார்கழி
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
20. பூராடம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
21. உத்திராடம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம் மகரம் தை
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
22. திருவோணம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
23. அவிட்டம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் கும்பம் மாசி
நான்காம் பாதம்
24. சதயம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
25. பூரட்டாதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம் மீனம் பங்குனி
26. உத்திரட்டாதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
27. ரேவதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்

16 Sept 2012

இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

                      குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஓர் நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.

                முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 பாகை அளவுள்ளது.13.33 பாகை என்பது 13o, 20 பாகைத்துளி (நிமிடவளைவுகள்). (1 பாகை= 60 பாகைத்துளி (நிமிடவளைவுகள்)).

15 Sept 2012

விண்மீன்

தனு நட்சத்திர மேகம் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட, பால்வெளி கலக்சியிலுள்ள, தனு நட்சத்திர மேகத்தின் இப் படத்தில் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் தெரிகின்றன.
 
 
                 விண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம்) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினாலாகும். சூரியன் இதற்கு விதிவிலக்கு. ஏனெனில், வட்டமான தட்டுப்போல் தெரிவதற்கும், பகலில் வெளிச்சம் தருவதற்கும் ஏற்றவகையில் பூமிக்குப் போதிய அளவு அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் மட்டுமே.
              விண்ணில் தெரியும் விண்மீன்களில் கணக்கற்றவை; அளவில் கதிரவனைப் போன்று பன்மடங்கு பெரியனவாய் உள்ள விண்மீன்களும் உள. விண்மீன்களில் உள்ள அணுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வேறு பொருள்களாய்த் திரிந்த வண்ணமாய் உள்ளன. இவ்வாறு அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது எராளமான ஆற்றல் வெளிவிடுகின்றது. வெளிவிடும் ஆற்றலின் ஒரு முகம்தான் கண்ணுக்குப் புலப்படும் ஒளி.

               சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புராக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் செல்லும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
        பெரும்பாலான விண்மீகள் 100 கோடிக்கும், 1000 கோடிக்குமிடைப்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. சில அண்டத்தின் மதிப்பிடப்பட்ட வயதான 1370 கோடி ஆண்டுகளளவு தொன்மையானவை. மிகச் சிறிய நட்சத்திரங்களிலிருந்து நமது சூரியனிலும் ஆயிரம் மடங்குகள் பெரிதான, அதாவது 160 கோடி கிலோமீற்றர் விட்டமுள்ள விண்மீன்கள் வரை, அண்டவெளியில் உள்ளன. தங்கள் ஆற்றல் மூலங்களை முற்றாக இழந்தபின், சொந்த ஈர்ப்பு விசையின் கீழ் ஒடுங்கி மிகச்சிறிய அளவினதாக மாறிவிடுகின்ற விண்மீன்கள் , வெண் குறுமீன்கள் (White Dwarf), நியூத்திரன் விண்மீன்கள், கருந்துளைகள் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன.

13 Sept 2012

சூரியக் குடும்பம்

சூரியக் குடும்பத்திலுள்ள கோள்கள்

  • புதன்
  • வெள்ளி
  • பூமி
  • செவ்வாய்
  • வியாழன்
  • சனி
  • யுரேனஸ்
  • நெப்டியூன்

குறுங்கோள்கள்

  • செரசு
  • புளூட்டோ
  • ஏரிஸ்
  • ஹௌமியா
  • மேக்மேக்
  • ஸெட்னா

துணைக் கோள்கள்

  • நிலா

12 Sept 2012

கோள்

             கோள் என்பது ஒரு விண்மீனின் ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் விண்மீனைச் சுற்றி வரும் ஒரு பெரிய பருப்பொருள். விண்மீன்களைப் போல கோள்கள் தன்னுள்ளே வெப்ப அணுப்புணர்ச்சிகள் ஏதும் நிகழ்ந்து கடுவெப்பம், பேரொளி, பேராற்றல் கதிர்கள் வீசுபவை அல்ல.


 
            பெரும்பாலும் வளிமத்தால் ஆன நான்கு மிகப்பெரிய வளிமப்பேருண்டைக் கோள்கள்: வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ். மஞ்சள் நிறத்தில் காட்டியுள்ள கதிரவனும் இந்த நான்கு கோள்களும் முறையான ஒப்பீட்டு அளவுகளுடன் காட்டியுள்ளன
 

11 Sept 2012

நாடி சோதிடம் - உயர்வுகள்

                       நாடி சோதிடம் பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களாக இவ்வுலக ஆன்மாக்களுக்கு உபதேசிக்கப்பட்டு வருகின்றது. அண்டசராசரங்களுக்கும் ஆதிகுருவாக விளங்கக்கூடிய அருள்குரு ஸ்ரீ காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய அருள்குரு ஸ்ரீ கோரக்கருக்கு உபதேசம் செய்த நாடிநூல் உலகப்பிரசித்தி பெற்றதாகும். தேவேந்திரனால் நடத்தப்படும் தேவசபையை காகபுஜண்டர் நாடி சோதிடம் நிர்ணயம் செய்கிறது. நாடி சோதிடம் மூலம் இவ்வுலத்தில் உள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களின் பலன் களையும் தெரிந்து கொள்ளலாம். உலத்தில் ஒரு மனிதனை சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வழிகாட்டும் குருநூல் நாடி சோதிடம் ஆகும். மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளை உரைக்கும் நாடிநூல் அந்த தனிப்பட்ட மனிதனின் உயிர் ரேகைகளான நவரேகைகளிலொன்றை மையமாகக் கொண்டு சுழிமுனை நாடியை மையமாகக் கொண்ட நவநாடிகளில் ஒரு நாடியால் நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகத்தைப் பற்றிய பிற சூட்சும ரகசியங்கள் சுழிமுனை நாடியை மையமாகக் கொண்ட நவ நாடிகளில் ஒரு நாடியாலும் கால நிலையை மையமாகக் கொண்டும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
                     வேத சோதிடமானது ஒரு தனிப்பட்ட மனிதனின் (சோதிடரின்) சோதிடக் கல்வி, யுக்தி மற்றும் ஞானத்தால் நிர்ணயம் செய்யப்படுவதால் பலன்களின் நடைமுறைகளில் பிறழ்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாலும்; வேத சோதிடர் பலன்களை நிர்ணயிக்கும் பொழுது அவரின் ஊழ்வினை அவரை கட்டுப்படுத்துவதாலும் வேத சோதிடப் பலன்கள் முழுமையான பலன்களை இவ்வுலகிற்கு அளிப்பது மிகக்கடினமான ஒன்றாக இருப்பதால் ஊழ்வினைக்குட்படாத முனிவர்களால் நிர்ணயிக்கப்படும் நாடி சோதிடப்பலன்கள் உயிருள்ள பலன்களாகும். வேத சோதிடப்பலன்களின் மூலநூல் உரைநடை வழியைக் கொண்டுள்ளதால் பலன்களின் உயிர் தன்மை முழுமைபடுத்துவதில் சிரமங்கள் இருக்கின்றது. உயர்வான ஊழ்வினைகளை சுமக்கும் தர்ம சிந்தனைக் கொண்ட வேத சோதிடரால் மட்டுமே உயிருள்ள சோதிடப் பலன்களை இவ்வுலகிற்கு கொடுக்க முடியுமென்பதால் இத்தகைய நிலை கொண்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே. இப்புவியில் வாழ்வதால் வேத சோதிடத்தின் பலன்கள் முழுமை பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன.
                         நாடி சோதிடத்தின் மூலநூல் செய்யுள் வடிவத்தைக் கொண்டதாகும், "தமிழ்" ஓர் உயிருள்ள மொழியாகும். எனவே, தமிழில் உயிர் எழுத்துக்கள் என்றும்; உடல் (மெய்) எழுத்துக்கள் என்றும்; உயிருடல் எழுத்துக்கள் (உயிர்மெய் எழுத்துக்கள்) என்றும்; மேற்கண்ட அனைத்தையும் இயக்கும் ஆயுத எழுத்து ஒன்றுமாக தமிழ்மொழி வடிவமைக்கப்பட்டுள்ளதாலும்; மேற்கண்ட நான்கு பிரிவுகள் மட்டுமல்லாமல் தேவரகசியமாக ஐந்தாவது பிரிவான ஆண் எழுத்துக்கள் மற்றும் பெண் எழுத்துக்கள் என்னும் சூட்சுமப் பிரிவு தமிழ்மொழியில் உள்ளதால் ஆண் எழுத்துக்களையும் பெண் எழுத்துக்களையும் சமமான ஆற்றலோடு பாடல் வகையில் பிணைத்து பலன்களை முறைப்படுத்தி பாடல் வடிவில் பலன்களை இவ்வுலகத்திற்கு சொல்கின்றபடியினால் எவ்வாறு ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சமமாக முழுமையாக புணர்ச்சி செய்தால் அதன் விளைவாக ஒரு முழுமையான உயிர்ப்பொருள் இவ்வுலகத்தில் படைக்கப்படுமோ அவ்வாறே நிலையுடன் நாடி சோதிடப்பலன் கள் "அறம்பாடல்" என்னும் சூட்சுமக்கயிற்றால் பிணைக்கப்பட்டு வெளியிடப்படுவதால் உலகத்தில் வாழும் அனைத்து சோதிட சாஸ்திரத்தினும் உயர்வுள்ளதாய் "தாய்" சாஸ்திரமாக நாடி சோதிட சாஸ்திரம் விளங்குகிறது.
                  பல ஆண்டுகளுக்கு முன் அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய அருள்குரு கோரக்கருக்கு உலகத்தின் பல்வேறு ரகசியங்களைப் பற்றி போதித்து வருகையில் அருள்குரு கோரக்கர் தன்னுடைய குருவாகிய காகபுஜண்டரிடத்திலே இவ்வுலக மானிடர்களின் வாழ்க்கை நிலைகளைப் பற்றிய சூட்சுமங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டபடியினால் அருள்குரு காகபுஜண்டரும் அதற்கு இணங்கி இந்திந்த காலத்தில் இன்னவயது கொண்ட இன்ன பிறப்பு விவரங்களைக் கொண்ட இந்த மானிடர் நாடிநூல் சுருதியை வேண்டிக் கேட்பார், அப்போது அந்த மானிடருக்கு இன்னன்ன பலன்கள் நடக்கும் எனப் பாடல் வடிவில் தன் சீடரிடத்திலே திருவாய் மலர்ந்தருளினார். அருள்குரு காகபுஜண்டரால் திருவாய் மலர்ந்தருளப் பெற்ற தேவரகசியங்களை ஓலைச்சுவடியில் எழுதி அருள்குரு கோரக்கர் தன்னுடைய ரகசியப் பேழையில் வைத்து அவரின் ரகசிய இடமாகிய கொல்லிமலை கோரக்கர் குண்டத்தில் வைத்து பாதுகாத்து வைத்தார். அருள்குரு காகபுஜண்டர் மற்றும் அருள்குரு கோரக்கரின் குருவருளால் மேற்படி குருமார்களின் கலியுக வாரிசான பாஸ்கரமகரிஷி அவர்களுக்கு புதையலாக கோரக்கரால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் கிடைக்கப் பெற்று இவ்வுலகோருக்கு குருவருள் ஆணைப்படி விரித்துரைக்கப்படுகின்றது. எனவே, முனிவர்களால் நேரடியாக வழங்கப்படுகின்ற நாடி சோதிட சாஸ்த்திரம் பிற சாஸ்திரத்தினும் தலையானதாகும்.

10 Sept 2012

நாடி சோதிடம்

                        நாடி வரும் ஆன்மாவிற்கு உபதேசிக்கப்படும் வாழ்க்கைப் பலன்கள் நாடி சோதிடம் எனப்படும். ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பிரதான சுவாச நிலைகல் இருவகைகளாகப் பிர்க்கப்பட்டுள்ளது. அவைகள் இடகலை (சூரிய கலை) மற்றும் பிங்கலை (சந்திர கலை) எனப்படும். இடகலை என்பது வலது நாசியின் வழியாக செல்லும் சுவாசத்தைக் குறிப்பதாகும். பிங்கலை என்பது இடது நாசியின் வழியாக செல்லும் சுவாசத்தைக் குறிப்பதாகும். மேற்கண்ட இரண்டு சுவாசக்கலைகளோடு மூன்றாவதாக ஒரே நேரத்தில் வலது மற்றும் இடது நாசிகளின் வழியாக சுவாசக்கலை நடத்துதல் சுழிமுனை எனப்படும். முனிவர்கள், சித்தர்கள், ஞானிகள் மற்றும் யோகிகள் மூன்றாம் கலையான சுழிமுனைக்கலையை நடத்தி உயிர் வாழ்பவர்களாவார்கள்.

                            சுழிமுனைக்கலையை நடத்துபவர்களுக்கு முக்கால ஞானத்தைப் பெறும் சித்தி ஏற்படும். சுழிமுனை நாடியை அடிப்படையாகக் கொண்டு அதன் உட்பிரிவுகளாகிய ஏழு சுவாசக்கலைகளையும் வெவ்வேறு சதவீத நிலைகளில் நடத்தலாம். சப்த நாடிகலைகளாவது அத்தி, அலம்புடை, காந்தாரி, சங்கினி, சிங்குவை, புருடன் மற்றும் குரு ஆகிய உட்பிரிவுக் கலைகளாகும். முனிவர்கள் தாங்கள் சுவாசிக்கும் பிரதான மற்றும் உட்பிரிவு நாடிகலைகளின் வழியாக அவர்களிடம் நாடி வரும் ஆன்மாக்களின் நல்வினை மற்றும் தீவினைப் பலன்களை ஞானத்தில் உணர்ந்து உலகத்திற்கு உணர்த்துவார்கள். எனவே, சப்த நாடிகளின் ரகசிய பிம்பங்களை ஆதாரமாகக் கொண்டு நவகிரகங்களின் சூட்சும ரகசியங்களோடு ஒப்பிட்டு உலகிற்கு அளிக்கும் சோதிட உபதேசம் நாடி சோதிடமாகும்.

9 Sept 2012

இந்து சோதிடம் (எ) இந்திய சோதிடம்


                  இந்து என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரன் என்றால் தாய் என்று பொருள். எனவே, இந்து மதம் உலகத்தின் தாய் மதமாகும். எனவே, இந்து சோதிட சாஸ்திரமானது இவ்வுலகில் வாழும் பிற சோதிட சாஸ்திரங்களுக்கெல்லாம் தாய் சோதிட சாஸ்திரமாகும். ஒரு தாயானவள் தன் குழந்தைக்கு எப்படி கபடமில்லாமல் உலக ரகசியங்களை தன் குழந்தைக்கு அன்போடு உபதேசிப்பாளோ அவ்வாறு முழுமையாக உபதேசிக்கும் சோதிடம் எனப்படும். வேத சோதிடம் இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டதால் இதற்கு இந்து சோதிடம் என்று மற்றொரு பெயரும் வழங்கலாயிற்று. ஊழ் வினையின் பயனாக விளையும் வாழ்க்கைப்பயிரில் ஏற்படும் களைகளைக் களைந்து வாழ்க்கைப் பயிர் செம்மையாக வளர்ந்து ஓங்க வழிகாட்டும் குரு உபதேசம் இந்து சோதிடம் ஆகும்.
           இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரன் ஆகிய முமூர்த்திகளை அடிப்படையாகக் கொண்ட தேவ குடும்பத்தினர்களின் அருளால் இவ்வுலக உயிர்களின் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகள் மற்றும் தீமைகளைக்களையும் பரிகார மார்கங்களாகிய தேவதாபிரதிட்டைகள் மற்றும் தேவதா வழிபாடு போன்ற தெய்வீக முறைகளை முழுமையாக விளக்கும் வேத சோதிடமே இந்து சோதிடம் எனப்படும். இந்து சோதிடமானது இந்தியாவில் பிறந்த சோதிட சாஸ்திரமாகையால் இதற்கு இந்திய சோதிடம் என்றொரு பெயரும் வழங்கலாயிற்று.

8 Sept 2012

வேத சோதிடம் - அறிமுகம்

                      உலகில் வாழும் உயிர்களுக்கு வழிகாட்டும் தேவரகசியங்கள் அடங்கிய குருநூல் வேதம் எனப்படும். உலகத்தின் முழு முதற்கடவுளான பரம்பொருளை அடிப்படையாகக் கொண்டு, பரம் பொருளால் இவ்வுலகை ஆள்வதற்காக நியமிக்கப்பட்ட நவகிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய பிரதான கிரகங்கள் மற்றும் அதன் பண்புகள்; நவகிரகங்களின் உள்ளாதிக்கத்திற்குட்பட்ட இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் மற்றும் ராசி மண்டலத்தின் பன்னிரண்டு ராசிகள் மற்றும் அவைகளின் பண்புகள், காலக் கணக்கீடுகளை நிர்ணயம் செய்யும் ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள், திதிகள் மற்றும் கரணங்கள் மற்றும் அவைகளின் பண்புகள் வரையிலான ஆதிக்கஸ் சக்திகளால் இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் முக்கால நிகழ்வுகளை நூல் வழியிலும், யுக்தியின் வழியிலும், ஞானத்தின் வழியிலும் உணர்ந்து உலகிற்கு பலன்களைக் உணர்த்தி வழிகாட்டும் குரு உபதேசம் "வேத சோதிடம்" எனப்படும்.

6 Sept 2012

சோதிடம் அறிமுகம்


         அண்டவெளியில் சுழன்று கொண்டிருக்கும் நவகிரகங்களின் ஒளிச்சிதறல்களின் தாக்கத்தால் பூவுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை வெளிச்சம் காட்டி உலகத்தோருக்கு வழிகாட்டும் தெய்வீக சாத்திரம் "சோதிடம்" எனப்படும்.

    சோதி+இடம் = சோதிடம். இருள் சூழ்ந்துள்ள ஓர் அறையில் சோதியமயமான ஒரு விளக்கை ஏற்றினால், அந்த அறையின் முழு ரகசியங்களும் எப்படி தெள்ளத் தெளிவாகக் காட்சி கொடுக்கின்றதோ அவ்வாறாகவே வாழ்க்கை என்னும் அறையில் சோதிமயமான ஞானவிளக்கை ஏற்றிப்பார்த்தால் வாழ்க்கையின் முழு ரகசியங்களும் மிகத் தெளிவாக காட்சி கொடுக்கும். ஊழ்வினையை அடிப்படையாகக் கொண்டு உலக உயிர்கள் அடையக் கூடிய வாழ்க்கையின் முக்கால ரகசியங்களை விளக்கி வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருநூல் சோதிடம் எனப்படும்.

4 Sept 2012

சோதிடத்தில் விண்மீன் குழுக்கள்

ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 1313 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூர் செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூராகும், 'ரேவதி' கடைக்கூராகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 313 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூராகும், 'மீனம்' கடைக்கூராகும்.
இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்:
விண்மீன் குழு இராசி பாகை
அசுவினி மேடம் 13°20'
பரணி மேடம் 26°40'
கிருத்திகை பாதம் 1 மேடம் 30°
கிருத்திகை பாதம் 2,3,4
ரோகிணி பாதம் 1
இடபம் 43°20'
ரோகிணி பாதம் 2,3,4
மிருகசீரிடம் பாதம் 1
இடபம் 56°40'
மிருகசீரிடம் பாதம் 2 இடபம் 60°
மிருகசீரிடம் பாதம் 3,4
திருவாதிரை பாதம் 1,2
மிதுனம் 73°20'
திருவாதிரை பாதம் 3,4
புனர்பூசம் 1,2
மிதுனம் 86°40'
புனர்பூசம் பாதம் 3 மிதுனம் 90°
புனர்பூசம் பாதம் 4
பூசம் பாதம் 1,2,3
கடகம் 103°20'
பூசம் பாதம் 4
ஆயில்யம் பாதம் 1,2,3
கடகம் 116°40'
ஆயில்யம் பாதம் 4 கடகம் 120°
மகம் சிங்கம் 133°20'
பூரம் சிங்கம் 146°40'
உத்திரம் பாதம் 1 சிங்கம் 150°
உத்திரம் பாதம் 2,3,4
அட்டம் பாதம் 1
கன்னி 163°20'
அட்டம் பாதம் 2,3,4
சித்திரை பாதம் 1
கன்னி 176°40'
சித்திரை பாதம் 2 கன்னி 180°
சித்திரை பாதம் 3,4
சுவாதி பாதம் 1,2
துலாம் 193°20'
சுவாதி பாதம் 3,4
விசாகம் பாதம் 1,2
துலாம் 206°40'
விசாகம் பாதம் 3 துலாம் 210°
விசாகம் பாதம் 4
அனுடம் பாதம் 1,2,3
விருச்சிகம் 223°20'
அனுடம் பாதம் 4
கேட்டை பாதம் 1,2,3
விருச்சிகம் 236°40'
கேட்டை பாதம் 4 விருச்சிகம் 240°
மூலம் தனுசு 253°20'
பூராடம் தனுசு 266°40'
உத்திராடம் பாதம் 1 தனுசு 270°
உத்திராடம் பாதம் 2,3,4
திருவோணம் பாதம் 1
மகரம் 283°20'
திருவோணம் பாதம் 2,3,4
அவிட்டம் பாதம் 1
மகரம் 296°40'
அவிட்டம் பாதம் 2 மகரம் 300°
அவிட்டம் பாதம் 3,4
சதயம் பாதம் 1,2
கும்பம் 313°20'
சதயம் பாதம் 3,4
பூரட்டாதி பாதம் 1,2
கும்பம் 326°40'
பூரட்டாதி பாதம் 3 கும்பம் 330°
பூரட்டாதி பாதம் 4
உத்திரட்டாதி பாதம் 1,2,3
மீனம் 343°20'
உத்திரட்டாதி பாதம் 4
ரேவதி பாதம் 1,2,3
மீனம் 356°40'
ரேவதி மீனம் 360°

3 Sept 2012

சோதிடத்துக்கான வானியல் அடிப்படை

சோகி மற்றும் கை ரேகை பார்த்து குறி சொல்லுதல்
 
 
             கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாறு:
  1. சூரியன் (ஞாயிறு Sun)
  2. சந்திரன் (திங்கள் Moon)
  3. செவ்வாய் (Mars)
  4. புதன் (அறிவன் Mercury)
  5. குரு (வியாழன் Jupiter)
  6. சுக்கிரன் (வெள்ளி Venus)
  7. சனி (காரி Saturn)
  8. இராகு (நிழற்கோள்)
  9. கேது (நிழற்கோள்)
                   கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:
  1. மேடம் (மேஷம்)
  2. இடபம் (ரிஷபம்)
  3. மிதுனம்
  4. கர்க்கடகம் (கடகம்)
  5. சிங்கம் (சிம்மம்)
  6. கன்னி
  7. துலாம்
  8. விருச்சிகம்
  9. தனு (தனுசு)
  10. மகரம்
  11. கும்பம்
  12. மீனம்

2 Sept 2012

தமிழர் சோதிடம்














சோதிடம்
Venice ast sm.jpg

S ari.gif
S tau.gif
S gem.gif
S can.gif
S leo.gif
S vir.gif
S lib.gif
S sco.gif
S sag.gif
S cap.gif
S aqu.gif
S pis.gif
மேஷம் • ரிஷபம் • மிதுனம் • கடகம் • சிம்மம் • கன்னி • துலாம்
விருச்சிகம் • தனுசு • மகரம் • கும்பம் • மீனம்
சோதிடம் உள்ளடக்க வகைகள்
——————
குறிப்புதவிக்கு
பட்டியலை விரிவுபடுத்தவும்

——————
[] சோதிடம்
[×] அஷ்டகவர்கம்
[×] இராசிகள்
[×] இலக்கினங்கள்
[×] குறி கூறுபவர்கள்
[×] சீன சோதிடம்
[+] சோதிட நூல்கள்
[×] திதிகள்
[×] சோதிட நட்சத்திரங்கள்
[×] யோகங்கள்
விரைவு இணைப்பு: கிளைகள்
சீன முறை • மருத்துவ சோதிடம் • கிளி சோதிடம் • நிதியியல் சோதிடம் • இடவமைப்பு சோதிடம்

தமிழகக் கிராம மக்களிடம் கிளி சோதிடம் பார்க்கும் பழக்கமுள்ளது.
 
 
சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒரு துறையாகும். சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர். உலகின் பல பகுதிகளிலும் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பத்திரிகைகள் சோதிட ரீதியான அன்றாட பலன்களைத் தாங்கிவருவதே இதற்குச் சான்று.
கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்.