4 Oct 2013

நூல்கள் -பட்டினத்து அடிகள்

           பட்டினத்து அடிகள் பாடியனவாக பதினொன்றாம் திருமுறைப் பிரபந்தங்களையன்றி வேறுபல பாடல்களுடன் வெளிவந்துள்ள பட்டினத்தார் பாடல் என்ற நூல் பிற்காலப் புலவர் சிலரால் பாடித் தொகுக்கப்பட்டது. இந்நூலில் உள்ள பிரபந்தப் பாடல்கள் உயர்ந்த நடையில் விளங்குதலையும், அந்நூற் பாடல்கள் சாதாரண மக்கள் வழக்கில் பாடப் பட்டிருத்தலையும் சுட்டிக்காட்டி பட்டினத்தார் பாடல்கள் என வழங்கும் நூல் பிற்காலப் புலவர் ஒருவரால் செய்யப் பெற்று அடிகள் பெயரில் வழங்கப்படுவதாகும் என ஆய்வறிஞர்கள் கருதுவர்.