17 Apr 2013

திருமூலர் பெருமை:

மூலனுடம்பிற் புக்குத் திருமூலராய் எழுந்த சிவயோகியார், இறைவனருளால் சதாசிவமூர்த்தியை ஒத்துச் சிவாகமப் பொருளை அறிவுறுத்தும் முற்றுணர்வும் தேவர்க்கெல்லாம் முதன்மையும் உடையவராகத் தாம் விளங்கிய திறத்தினை,


நந்தி யருளாலே மூலனை நாடிப்பின்


நந்தி யருளாலே சதாசிவ னாயினேன்


நந்தி யருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்


நந்தி யருளாலே நானிருந் தேனே. -தி.10 பா.29


என வரும் திருப்பாடலிற் குறித்துள்ளார்.

No comments:

Post a Comment